search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Washermanpet to DMS"

    மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். #MetroTrain
    சென்னை:

    வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே புதிய பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- விமான நிலையம்வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்- பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடைந்துள்ளது.

    இந்த 2 வழித்தடத்திலும் நேற்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ஆனால் சைதாப்பேட்டை- சின்னமலை இடையே உயர் அழுத்த மின் கம்பியில் பழுது ஏற்பட்டதால் டி.எம்.எஸ்.- சின்னமலை இடையே சேவை தடைப்பட்டது. இதனால் இலவச பயணம் செய்ய ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    6 மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மெட்ரோ ரெயிலில் முழுமையாக பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து குடும்பத்துடன் வந்தவர்கள் ஒரு பகுதி சேவை முடங்கியதால் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

    இதனால் பொதுமக்கள் வசதிக்காக இன்று மேலும் ஒரு நாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம்.

    ஆனாலும் நேற்று மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். புதிய சேவையை ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் இலவச பயண திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. பொது மக்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் பயணத்திற்கு இணைப்பு வசதியை அளித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது 55 ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த மெட்ரோ நிர்வாகம் அடுத்த கட்ட முயற்சிகளை கையாண்டு வருகிறது. #MetroTrain
    முதல் கட்டமாக நடந்து வரும் மெட்ரோரெயில் பணிகளில் 35 கிலோ மீட்டர் பணிகளை முடித்துள்ளதாகவும் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே செப்டம்பரி சோதனை ஓட்டம் நடைபெறம் என அதிகாரி தெரிவித்தார். #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விரைவான போக்குவரத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கு ஒரு பாதையும், சென்ட்ரலில் இருந்து பெரியார் சாலை, அணணாநகர், வடபழனி வழியாக பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலான பாதை முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலான பாதை முடிக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சுரங்க பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

    இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் பாதையில் செப்டம்பர் 1-ந்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதல் கட்டமாக நடந்து வரும் மெட்ரோரெயில் பணிகளில் 45 கிலோ மீட்டரில் 35 கிலோ மீட்டர் பணிகளை முடித்துள்ளோம். வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சிக்னல், எலெக்ட்ரானிக் பணிகள் நடைபெறுகிறது. திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கிறது.

    செப்டம்பரில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லாப் பணிகளும் முடிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    ×