search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறைகள்"

    • சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
    • அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.

    சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.

    சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.

    இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    • குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் 30 கி.மீ வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது.
    • 15.9 சதவீதம் பேர் சரியானதே என்றும் 46 சதவீதம் பேர் மாற்றம் தேவை என்றும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

    சென்னை:

    நாட்டில் 68 சதவீத சாலை விபத்துகளுக்கு வாகனங்களில் அதிவேகமாக செல்வதே காரணம் என மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து வேகக் கட்டுப்பாடு விதிமுறைகளை சென்னை காவல் துறை அறிவித்து உள்ளது.

    நாளை முதல் சென்னையில் கார், மினிவேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும், பஸ், லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு 50 கி.மீ வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம். அதே வேளையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகை வாகனங்களுக்கும் 30 கி.மீ வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது.

    இந்த அறிவிப்புக்கு இருக்கும் வரவேற்பை அறிந்து கொள்ளும் வகையில் மக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் சமுக ஊடகமான எக்ஸ் தளத்தில் சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு பக்கத்தில் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

    அதில் புதிய வேகக் கட்டுப்பாடு மிக சரியானதா, சரியானதா, மாற்றம் தேவயைா என 3 பகுதிகளாக பிரித்து கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. புதிய வேகக் கட்டுப்பாடு 30 சதவீதம் பேர் மிக சரியானதே என்றும், 15.9 சதவீதம் பேர் சரியானதே என்றும் 46 சதவீதம் பேர் மாற்றம் தேவை என்றும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

    மேலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்தும் தங்களது கருத்துக்களை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படை யில் புதிய வேகக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்க பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளி ட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார். முன்னதாக தமிழ்நா டு காவல்துறை சார்பில் தியாகதுருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
    • பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?

    * கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

    * பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    * ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

    *ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

    மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

    பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!

    ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.

    கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.

    இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.

    கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.

    காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.

    மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

    சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.

    குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

    • வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
    • அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

    அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

    குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.

    அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்

    குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

    எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

    • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
    • ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேன்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

    விருதுகள் விவரம் வருமாறு:-

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு-முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள் இதற்கு தகுதியடையவர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-தனிநபர்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-நிறுவனம்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்.

    சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை, பரிசு தொகை ரூ.15000. சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் வருமாறு:-

    விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 01-01-2022 முதல் 31-2-2022 வரை உள்ள தகுதி காலத்திற்குள் தனிநபர் -நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். தனிநபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர் சி நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட 1-1-2022 முதல் 31-12-2022 வரை உள்ள காலகட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள் , பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். மேற்கண்ட களப்பணியை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் ,தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் , நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட நான்கு பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தநபர்கள், நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மேற்கண்ட நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள்,நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.

    சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தனி விதிகள்:-

    சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2022-ம் ஆண்டு ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022-ம் வரை வெளியான, தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு மடலும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும் / ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ,அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்று விவரம் அளித்தல் வேண்டும்.இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்தபுத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.ஆராய்ச்சிக் கட்டுரையின் 6 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

    ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பிக்கும் முறை:-

    விண்ணப்பத்துடன் செயலாக்கத்தினை உறுதிபடுத்தும் வகையில், பிரசுரச்சீட்டுகள், ஊர்வலங்கள் மற்றும் நிழற்படங்கள்,மற்ற அவசிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கபட்டிருக்கவேண்டும்.ஸ்டேப்ளர்பின் கொண்டு இணைக்கப்படக்கூடாது.இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநரக வளையதளத்தில் (www.environment.tn.nic.in) இருந்து 15.8.2023பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். வலைதள முகவரி தொலைபேசி எண்-www.environment.tn.nic.in- 2433 6421.

    விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யும் கடைசி நாள் -15.8.2023.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வந்து சேர வேண்டிய கடைசி நாள்-21.8.2023.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' (Director, Department of Environment and Climate Change)என்ற பெயரில் ரூ.100 க்கான கேட்புக் காசோலையுடன் 3 புகைப்படங்களையும் இணைத்து அனுப்பவேண்டும்.இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைதளம், பனகல்மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு 21.8.2023 அன்று மாலை 5 மணிக்குள்ளாக தபால் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • டாஸ்மாக் கடைகள் 1-ந் தேதி அடைக்கப்படுகிறது.
    • விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மே தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபான விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் வகையில் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று முழுமையாக மூடி வைக்க ஆணையிடப்படுகிறது. மேற்கண்ட நாளில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.
    • தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது.

    தாராபுரம் :

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அரசு துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன ங்களில் இருந்து தேவை யான தகவல்களை பொதுமக்கள் கோரி பெற முடியும்.இதை பயன்படுத்தி பொதுமக்கள், தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.இவ்வாறு வரும் மனுக்களுக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் பணியில் இருப்பார்.

    விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள், தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும் என்பது விதி முறை. கோரிக்கை நிராக ரிக்கப்பட்டால் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டின்போது மனுதாரர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று விதிமுறை இதுநாள் வரை இருந்தது. ஒரு வேளை அவர் நேரில் வர முடியாவிட்டால் எழுத்துபூ ர்வமாக மனு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. இது தகவல் உரிமை ச்சட்ட ஆர்வல ர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது. அதை கருத்தில் கொண்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் மனித வள மேம்பாட்டுத்து றை செயலாளர் பிறப்பித்த அரசாணைப்படி மேல் முறையீட்டு மனு விசா ரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக தேவை யில்லை.இதற்கெனதகவல் ஆணை யத்தின் (மேல்முறை யீட்டு நடைமுறை) விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்ப ட்டுள்ளது.மேல் முறையீடு மனு மீதான விசாரணை நடத்தும்போது நேரடியாக ஆஜராவதற்கு பதிலாக வீடியோ கான்பரன்ஸ் முறையிலும் ஆஜராகலாம்.இதை தனக்குள்ள அதிகா ரத்தை பயன்படுத்தி ஆணையமே முடிவு செய்யலாம் என்று உத்தர வில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த தகவல் உரிமைச்ச ட்ட ஆர்வலர்கள் கூறுகை யில், இந்த திருத்தம் காலத்துக்கு ஏற்ற மிகவும் அவசியமான திருத்தம். இதன் மூலம்தகவல் கோரும் மனுதாரர்கள், அதிகாரிகள் அலைச்சல் தவிர்க்கப்படும். பொருட்செலவு குறையும். இதே போல தகவல் கோரி விண்ணப்பிக்கும் நடை முறையை, காலத்துக்கு ஏற்றபடி ஆன்லைன் முறைக்கு மாற்றினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் குறள் போல நுகர்வின்றி எந்த ஒரு மனிதனுடைய வாழ்வும் அமையாது.
    • விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றி யும் வாங்கிட உறுதி கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலமாக கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இவ்விழாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கி பேசியதாவது:-

    வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது நுகர்வு " நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் குறள் போல நுகர்வின்றி எந்த ஒரு மனிதனுடைய வாழ்வும் அமையாது. ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்குத் தேவையானவற்றை விலைக் கொடுத்து, பெற்று அனுபவிப்பதே "நுகர்வு" ஆகும். அப்படிப்பட்ட நுகர்வைச் சந்திக்கும் எல்லா மனிதருமே நுகர்வோர் ஆகிறார்.சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துபவர் நுகர்வோர் என வரைமுறை செய்யப் படுகிறார். நுகர்வு செயல்பாடு என்பது அதைச் சார்ந்தவர், விற்பனையாளர் மற்றும் பொருளைச் சார்ந்திருக்கிறது. இப்புதிய சட்டத்தில் 3 புதிய பிரிவுகள் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும். நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது. சமரச மையமும் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது , தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம்வாங்கும் பொருட்கள் , டெலி சாப்பிங், நேரடி விற்பனை, மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும். பாதுகாப்பு உரிமை, தேந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறும் உரிமை, முறையீட்டு உரிமை, நிவாரணம் பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, அடிப்படை தேவைக்கான உரிமை போன்ற உரிமைகள் சட்டபடி வழங்கப்பட்டாலும் அதை நாம் விழிப்போடு பயன்படுத்த வேண்டும்.

    நுகர்வோர்கள் குறைகளை தீர்க்க அரசின் சார்பில் நுகர்வோர் சேவை மையம் சென்னையில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 மாதத்திற்கு ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகளிடம் நுகர்வோர் நலன் சார்ந்த குறைபாடுகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் மன்றங்களின் நோக்கம், இளைஞர்களி டையே நுகர்வோர் உரிமைகள் குறித்த அறிவையும், திறமைகளையும் உருவாக்குவது. பொருட்களின் தரக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் சந்தையறிவு பற்றி கற்றுக் கொடுப்பது நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டங்களைப் பயிற்றுவிப்பது. சட்ட விரோதமான வணிக முறைகளால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு வளர்ப்பது. நிலைத்த தன்மை வாய்ந்த நுகர்வு முறைகளை பயிற்றுவிப்பதும் அவற்றை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இளைஞர்களிடையே அறிவார்ந்த வாங்கும் திறனை மேம்படுத்துவது. இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் நுகர்வோர்களே ஆவார். எனவே ஒவ்வொருவரும் பொருட்கள் வாங்கும் போது விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றி யும் வாங்கிட உறுதி கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் நந்தகுமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர் கைலாஷ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் ராஜசேகரன் மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்
    • பல்வேறு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டல இயக்குநரகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலைப் போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவுரைகளும் உறுதிமொழி ஏற்பும் தொடர்நது இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.

    பள்ளிசெயலர் ரஞ்சன்கோபால் ஆலோசனையின்படி நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அனந்தராமன் சாலைப் போக்குவரத்து விதிமுறை உறுதிமொழிகளை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.

    சாலையின்இடது புறமாக நடந்து செல்வேன், சாலையின் குறுக்கே கடந்து செல்லாமல் உரிய நடைபாதைகளில் மட்டுமே கடந்து செல்லுவேன், ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்,ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே மோட்டார் வாகனங்களை ஓட்டுவேன், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவேன், பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெற்றோரையும் தலைக்கவசம் அணிய வலியுறுத்துவேன் மற்றும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு முன்னதாகவே செல்லுவேன் முதலிய 25க்கு மேலான உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    • விதிமுறைகள் மீறப்பட்டதா? பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும்.

    மதுரை

    மதுரை திருப்பாலை தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் சென்ற 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையின் நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது. திருப்பாலை தனியார் பள்ளியில் மாணவிகளை அழைத்து வர பஸ் வசதி உள்ளது. இந்த நிலையில் பள்ளி பஸ்சில் நேற்று பழுதாகி நின்று விட்டது.

    பள்ளி நிர்வாகம் கிட்டத்தட்ட 150 மாணவிகளை ஒரே பஸ்சில் அடைத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. அழகர்கோவில், மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மாணவிகளுக்கு பஸ்சில் இடம் கிடைக்கவில்லை.

    அவர்கள் நின்று கொண்டு பயணிக்க நேர்ந்தது. கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளி பஸ்சின் வாகன ஓட்டுநர், அதே பகுதியில் உள்ள சந்துக்குள் பஸ்சை 30 நிமிடமாக நிறுத்தி வைத்தார்.

    பள்ளியில் இருந்து களைப்புடன் வீடு திரும்பிய மாணவிகளை, பஸ்சில் அடைத்து வைத்து காக்க வைத்ததால் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஜனனி, ரம்யா, பாவனா, பிரஜிதா ஆகிய 4 மாணவிகள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா கூறுகையில், பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தது, ஒரே பஸ்சில் அதிக அளவில் மாணவிகளை அழைத்துசென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    மதுரை தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான பஸ், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயந்து தெருவுக்குள் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் அந்த வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கியதா? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரை பாதுகாக்க முடியும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×