என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் ெரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை
- விழுப்புரத்தில் ெரயில் நிலையத்தில்வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது.
விழுப்புரம்:
நாடு முழுவதும் 75- வது சுதந்திர தினத்தை வருகிற 15 -e; தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்நிய சக்திகள் ஊடுறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு விமான நிலையம் ெரயில்நி லையம் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் சென்றால் அவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் ெரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் விழுப்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் விழுப்புரம் மாவட்ட வெடிபொருள் பிரிவு போலீசார் விழுப்புரம் ெரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைபாதை மற்றும் அங்குள்ள அறைகளிலும் சோதனை செய்தனர்.பின்னர் ெரயில்வே நிலையத்திற்கு வரும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிகின்றனர். மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்கின்றனர்.
அதன் பின்னர் இன்று காலை சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ெரயில் விழுப்புரம் வழியாக சென்றது. அப்போது பாதுகாப்பு படை போலீசார் ரயில் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.அதன் பின்னர் மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது. மேலும் இந்த தொடர் சோதனை வருகிற திங்கட்கிழமை வரை நீடிக்கும் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்