search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாடு"

    • மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • அடுத்த மாதம் 18-ந் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் திமுக சார்பில் மாவட்ட அளவிலான மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்எல்ஏ, கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து .மகேந்திரன், ஜி என் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தேசப்பன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் கலந்து கொண்டு மீனவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது, மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக கொடுத்துள்ளீர்கள் இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கையை எடுக்கப்படும்.

    தமிழக அரசு தற்பொழுது பல்வேறு கடற்கரை கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    மேலும் உப்பு நீர் ஊருக்குள் புகாத வகையில் பல்வேறு உப்பனாற்றில் தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துறைமுகங்கள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மீனவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர் நலன்களை பாதுகாக்கும் வகையில் அடுத்த மாதம் 18ம் தேதி தி.மு.க. சார்பில் ராமேஸ்வ ரத்தில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சாமிநாதன், நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், விஜயகுமார், மலர்விழி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்.
    • ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் அம்மா பேரவை யின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமையில் மாநாட்டிற்காக பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ? என்ற நினைத்த போது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

    மதுரை மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கவுரவிக்கிறார்.

    இன்றைக்கு 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார்.

    இந்த மாநாடு மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக வரும் கால்கோள் விழாவாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
    • சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறையிலே பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநில நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    சீர்காழி:

    மதுரையில் வருகிற 20ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேனர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி சீர்காழி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது.

    மாவட்ட அவை தலைவர் பி.வி. பாரதி தலைமையில், நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பைக், ஆட்டோ, வேன் , கார், உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு குறித்த ஸ்டிக்கர் மற்றும் பேனரை ஒட்டிப் பணிகளை அவை தலைவர் பி.வி. பாரதி தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் நகர செயலாளர் பக்ரிசாமி , ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரணிதரன், தொழில் அதிபர் சீனிவாசன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பொறு ப்பாளர்கள் வக்கீல்கள் நெடுஞ்செழியன், மணிவ ண்ணன் மற்றும் சுரேஷ், ரவி சண்முகம், நகர மகளிர் அணி செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன், துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பாலன், இளைஞர் பெருமன்ற சுரேஷ், லெனின், முருகானந்தம் மற்றும் நெல்லை களக்காடு, அம்பை, சேரை, பத்தமடை, நாங்குநேரி, வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தலைவராக தங்கையா, செயலா ளராக பாலன், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
    • உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, மகளிரணி, பாசறை அமைத்தல் மற்றும் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், மின்கட்டணமும், குடிநீர் கட்டணமும் உயர்ந்து விட்டது. மொத்தத்தில் தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி வரும் 20-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி துணை செயலாளர் மூர்த்தி, வட்ட செயலாளர்கள் கணேசன், இம்மானுவேல், நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொங்குநகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் பி.கே.முத்து முன்னிலையிலும், கோல்டன்நகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மகளிருக்கு உரிமைதொகை ரூ.1000 வழங்குவதில் தகுதியானவர்களுக்கு என்ற ஒரு புதிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பப் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அரசே ஒரு தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கலுக்கு 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது.

    அதற்கு முந்தைய ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கொரோனா நிதியும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க.வினர் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.

    இதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

    தாய் தமிழ்நாட்டை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி, கழகத்தின் எளிய தொண்ட னும் மக்கள் சேவையாலும், உழைப்பாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம் என்ற வரலாற்றை கழகத்தில் உருவாக்கித்தந்து, ஜனநா யகத்தை கட்டி காத்து, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற அம்மாவின் கனவை நனவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

    இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டு காலம் அன்னை தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று அம்மா வின் வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு க உறுப்பி னர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியில் 2 கோடி தொண்டர்களை கழகத்தில் இணைத்திட இலக்காக வைத்து, இந்த 75 நாட்களில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து தாய் தமிழ்நாட்டில் புதிய வெற்றி சரித்திரம் படைத்து காட்டியுள்ளார்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நேசித்த தென்தமிழகத்தின் தலை நகரம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத் தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்திய தேசமே திரும்பி பார்க்கும் வகையில், மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில், கழகத் தொண்டர்கள், பொது மக்கள் குடும்பம், குடும்ப மாக பங்கேற்று எடப்பாடி யார் தலைமை யில், அம்மாவின் புனித ஆட்சியை தாய் தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்திட உறுதி ஏற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க சட்டமன்ற அணிகள் மாநாடு நடைபெற்றது.
    • நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க சட்டமன்ற அணிகள் மாநாடு பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர் கே.சி.எம். பி. சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, துணைத் தலைவர்கள் வினோத் ,வெங்கடேஷ், ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். இந்த மாநாட்டில், தேசிய செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.எஸ். செல்வகுமார்,மாநில செயலாளர் மலர்கொடி தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பாஜக., அரசின் நலத்திட்டங்களை விளக்கிப் பேசினார்.

    இதில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சுப்பிரமணியம், செல்வராஜ், ஊடகப்பிரிவு மனோகரன்,மகளிர் அணி மகேஸ்வரி, இளைஞர் அணி தினேஷ், நகர செயலாளர் வடிவேல், பொதுச்செயலாளர் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
    • இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணிகள் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதப் பிரதமரின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிகள் மாநாட்டில் பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வருண் காந்தி,முக்தா சரவணன், இளங்கோவன், கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஜெயபால் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜக அரசின் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினர். இந்த மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணிகள் தலைவர்கள் பிரவீண் குமார், சரத்குமார், நாகராஜ்,ராஜன், பிரபாகரன், கலாவதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நந்தன்,கோட்டி, பொதுச் செயலாளர் பொன்.பாஸ்கர்,முத்துராஜ்,பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பொது செயலாளர் கோகுல், ரமேஷ்,பொருளாளர் பாலாஜி பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் டி.ஹரிதாஸ், பாஜக நிர்வாகிகள் மகேஷ்வரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    70 வயதாகும் ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக்கிளையின் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாடு கிரட் வளாகத்தில் நடந்தது.

    வட்ட கிளை இணை செயலாளர் காமாட்சி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்  நாராயணன், கிராம உதவியாளர் சங்க தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை இணை செயலாளர் பாண்டியம்மாள் வரவேற்றார். 

     வட்டக்கிளைசெயலாளர் வேல்மயில் வேலைஅறிக்கை வாசித்தார். பொருளாளர் பானு அறிக்கைவாசித்தார்.   செற்குழுஉறுப்பினர்  நாராயணன்   பேசினார்.  

    70வயதான ஓய்வூதியர் களுக்கு 10சதவிகித கூடுதல் பென்சன் வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2ஆயிரம் சமூகநீதிக்கு எதிரானது குறைந்தபட்சம் ரூ.7500வழங்கவேண்டும். 

    மருத்துவகாப்பீடு ரூ.350 என உயர்த்தப்பட்டுள்ளது வேதனைக்குறியது. காப்பீட்டு குளறுபடிகளை சரிசெய்யவேண்டும். புதியபென்சன்திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். 

    கிராம நிர்வாக அலுவலராக பதவிஉயர்வு பெற்றவர்களின் முழுபணிக்காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கவேண்டும். வாடிப்பட்டி பகுதியில் அரசுகலைக்கல்லூரி அமைக்கவேண்டும். 

    அலங்காநல்லூர் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கஉத்தவிட்டதமிழக அரசுக்கு நன்றிதெரிவிப்பது, பாலமேடு பகுதியில் காய்கனிகள் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு அமைத்துதரவேண்டும். 

    மத்திய அரசு வழங்குவதை போல் மாநிலஅரசும் ரூ.1000 மருத்துவபடி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரலட்சுமி நன்றிகூறினார்.
    ×