search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் விவசாய தொழிலாளர் சங்க மாநாடு
    X

    களக்காட்டில் விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

    • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன், துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பாலன், இளைஞர் பெருமன்ற சுரேஷ், லெனின், முருகானந்தம் மற்றும் நெல்லை களக்காடு, அம்பை, சேரை, பத்தமடை, நாங்குநேரி, வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தலைவராக தங்கையா, செயலா ளராக பாலன், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×