search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் இபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது, எனவேதான் புதிய சட்டம் கொண்டு வரவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டம் நீதி மன்றத்தில் உள்ளதால் அதிலேயே சிறந்த முறையில் வாதாடி நிச்சயமாக நிறைவேற்றி விட முடியும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற காரணத்தால்தான் மேல்முறையீடு செய்துள்ளோம், எந்தப் பகுதிகளிலும் ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்தாலும் காவல்துறையினர் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தியாவிலேயே பா.ஜ.க போன்ற அசிங்கமான அரசியல் கட்சி இல்லை என்பதற்கு அவர்கள் உதாரணமாக நேற்றைய தினம் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தில் நடந்து கொண்டனர்,

    மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு இருப்பதால் தமிழகத்தில் ஏதேனும் சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்.

    கடந்த ஆட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது ஒருவரது குடோனில் சோதனை நடத்தி அதில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. அது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள ஆட்சியில் எந்த அளவுக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை தடுக்க முடியுமோ அந்த அளவுக்கு தடுத்துக் கொண்டுதான் உள்ளோம். இருப்பினும் வெளிமாநிலங்களிலிருந்து திருட்டுத்தனமாக குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதையும் முடிந்த அளவு தடுத்து கொண்டுதான் உள்ளோம். கஞ்சா விற்பனையை முடிந்தளவு கட்டுப்படுத்தி அது இல்லை என்ற நிலையை கொண்டுவர தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது.

    அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறியதற்கு, மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி தி.மு.க. எதிர்ப்பு அரசியல் மூலம்தான் பா.ம.க.வை வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார். தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான் என்று கூறி வருகிறார்.
    சென்னை:

    ஆளும் கட்சியை எதிர்த்தும், விமர்சித்தும் அரசியல் செய்வதுதான் எதிர்கட்சிகளின் வேலை. அந்த வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. மட்டுமில்லாமல் பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளும் முட்டி மோதுகின்றன.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியானது. அதே நேரம் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனியாக போட்டியிட்டது. அந்த கட்சி பெற்ற வாக்குகளால் 15 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.

    எனவே ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அ.தி.மு.க.வை மக்கள் முற்றிலுமாக ஓரம் கட்டிவிடவில்லை என்பது தெரியவந்தது.

    ஜெயலலிதாவின் ஆளுமையும், தி.மு.க. எதிர்ப்பில் இருந்த உறுதியும்தான் அவர் இருக்கும் வரை அந்த கட்சிக்கு பலமாக இருந்தது.

    அவரது மறைவுக்கு பிறகு தலைமை மீதான நம்பிக்கையின்மை மட்டுமே அந்த கட்சியை சறுக்க வைத்தது.

    மீண்டும் தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தி கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரமாக்கி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தியே தீருவது என்ற தனது அஜென்டாவை நிறைவேற்றுவதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக வரிந்து கட்டி தமிழகத்தில் வளர்ந்து விடாமல் தடுப்பதில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வின் திட்டங்களை உடைத்து பா.ஜனதாவை வளர்ப்பதில் அண்ணாமலை தீவிரமாக உள்ளார்.

    அதன்படி தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் அதிரடியாக செயல்படுகிறார். தி.மு.க.வின் கருத்துகளுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கிறார். மாவட்ட வாரியாக சென்று தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டி அடுத்த ஒரு மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்காவிட்டால் திருச்சியில் 10 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்தப் போவதாக கெடு விதித்துள்ளார்.

    தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மத்திய அரசு மீது அமைச்சர்கள் வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உடனடியாக விளக்கம் அளிக்கிறார். தி.மு.க. மீதான இந்த எதிர்ப்பு அரசியல்தான் தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர உதவும் என்று நம்புகிறார்கள்.

    பா.ம.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணியும் தி.மு.க. எதிர்ப்பு அரசியல் மூலம்தான் பா.ம.க.வை வலுப்படுத்த முடியும் என்று கருதுகிறார். தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான் என்று கூறி வருகிறார்.

    திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டதாகவும் வளர்ச்சிக்கான, தொலைநோக்கு திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

    பா.ம.க. தமிழகத்துக்கான பல திட்டங்களை வகுத்து வைத்திருப்பதாகவும் ஒரு வாய்ப்பு தந்தால் தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

    ஆக, இந்த 3 கட்சிகளும் தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்வதில் போட்டி போடுகின்றன. அதன்மூலம் கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.
    சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறையில் தலைநகராக உள்ளது.

    கோவை:

    அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அன்றே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்கள் உற்பத்தி செய்த மின் அளவை நான் கூறினேன்.

    நாங்களும் இருக்கிறோம் என இருப்பை காட்டிக் கொள்ள வாய்க்கு வந்தபடி அண்ணாமலை பேசு வருகிறார். உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறி வருகிறார். எந்த குற்றச்சாட்டுகள் ஆக இருந்தாலும் ஆவணத்துடன் குற்றம்சாட்ட வேண்டும்.

    சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறையில் தலைநகராக உள்ளது. ரூ.1132 கோடியில் விமான நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரூ.800 கோடி அளவில் செலவிடப்பட்டு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்கள் அடுத்த 3 மாதங்களில் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறும்.

    தொழில்துறையுடன் முதல்-அமைச்சர் 3 மணி நேரம் அமர்ந்து அவர்களது கருத்துகளை கேட்டுள்ளார். அதனை செயல்படுத்த உத்தரவுகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு கடன் சுமைகள் உள்ளன. அதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மக்கள் 1.41 லட்சம் மனுக்கள் கொடுத்துள்ளனர். 25 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மற்ற மனுக்கள் மீது தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளன்று வழங்கப்படும்.

    அதன்படி, ‘கலைஞர் எழுதுகோல் விருது’ க்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூகநீதி விழுமியப் பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார் சண்முகநாதன். அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, ‘தினத்தந்தி’ குழுமத்தினால் வெளியிடப்பட்ட ‘வரலாற்றுச் சுவடுகள்’ நூல் தொகுப்புப் பணி ஆகும். பல்லாயிரம் பிரதிகள் விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப் பார்க்க உதவுகிறது.

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி சிறப்பித்தார்.

    உதவி ஆசிரியராக தினத்தந்தியில் பணியை தொடங்கிய ஐ.சண்முகநாதனின் பத்திரிகை பணி முழுவதும் தினத்தந்தியிலேயே இருந்தது. தினத்தந்தி பத்திரிகை ஆசிரியராக நீண்ட நெடிய ஆண்டுகளாக பணியாற்றியுள்ள அவர், தினத்தந்தி பணியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்.

    கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசியலில் மிக சோதனையான காலக்கட்டத்தில் அன்னை இந்திரா காந்தியோடு கூட்டணி அமைக்க சென்னை கடற்கரையில் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைப்பு விடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட 1980-ல் அரசியல் வியூகம் வகுத்தவர் கலைஞர். அதேபோல, வகுப்புவாத சக்திகளின் ஆட்சியை மத்தியில் அகற்றிட 2004-ல் அன்னை சோனியா காந்தியை ‘தியாகத்தின் திருவிளக்கே’ என்று அழைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய பெரும் துணையாக இருந்தவர் கலைஞர்.

    எந்த முடிவெடுத்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு உறுதியாக எடுத்து அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்தவர். தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக் காவலராக விளங்கியவர் கலைஞர்.

    மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், நிர்வாக பயிற்சி பெற்று இன்றைக்கு தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அனைவரும் போற்றுகிற வகையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியின் மூலம் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஓராண்டில் பத்தாண்டு கால பணிகளை செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொடர்ந்து நிலைத்திட அவர் பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

    அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு உள்பட முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.

    இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் மலர்தூவி வணங்கினார்.

    இதன் பிறகு சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரயாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டு வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    வீட்டின் உள்ளேயும் கருணாதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார். மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உதயநிதி ஸ்டாலின், அமிர்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதன் பிறகு ஓமந்தூரார் தோட்டத்தில் கடந்த 28-ந் தேதி துணை ஜனாதிபதியால் திறக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்.

    அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் சிலையை வடிவமைத்த மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    அந்த பகுதியில் நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

    ஏழைகளுக்கு அறுசுவை உணவு, பிரியாணியும் வழங்கப்பட்டன. கருணாநிதியின் சாதனை விளக்க பாடல்களும் ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டன.
    தி.மு.க. எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத ஜனநாயகத் தலைவராகவும், அண்ணாவின் அன்புத் தம்பியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி.
    சென்னை:

    தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு 3-ந்தேதி (இன்று) காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தி.மு.க. எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டுக் காலம் அசைக்க முடியாத ஜனநாயகத் தலைவராகவும், அண்ணாவின் அன்புத் தம்பியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி.

    அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 5 முறை முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை-எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல சமூக நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். இந்தியாவிற்கே முன்னோடியாய் சமூகநீதி காத்து சமத்துவபுரம் அமைத்த சமுதாயக் காவலர்.

    தன் வாழ்நாளின் இறுதிவரையில் தமிழாய் வாழ்ந்து தமிழாய் நிலைத்தவர். ஓய்வறியாக் கதிரவன்போல் தன் வாழ்நாளின் இறுதி வரையில் ஓய்வென்பதையே அறியாமல், அடித்தள மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்தவர். கருணாநிதிக்கு மென்மேலும் பெருமை சேர்க்கின்ற வகையிலும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

    அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சீரோடும் வெகு சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    புதிய கல்வி கொள்கை குறித்த புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை. இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
    திருச்சி :

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் 'சேவை முன்னேற்றம் ஏழைகளுக்கான ஆட்சி' என்ற நிகழ்ச்சி மாவட்டந்தோறும் வருகிற 15-ந் தேதி வரை நடத்தப்படும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் வீடு இல்லாத ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.

    வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.

    கடந்த 2014-ம் ஆண்டு சூரிய மின் உற்பத்தி 2 ஜிகாவாட் ஆக இருந்த நிலையில் தற்போது 53 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. போலி ரேஷன்கார்டுகள் ஒழிப்பு கொரோனா காலக்கட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

    2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளன.

    மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் காங்கிரஸ் நேரடியாகவும், தி.மு.க. மறைமுகமாகவும் இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சட்டம்-ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது. தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளன.

    தி.மு.க. ஆட்சி குறுநில மன்னர்களின் ஆட்சி, ஷெல் கம்பெனிகளை வளர்க்கக்கூடிய ஆட்சி. தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு என்று தனி இலவச எண்ணை ஆரம்பிக்க யோசித்து வருகிறோம். தமிழகத்தில் 2 துறையில் நடந்த ஊழல் பற்றிய விவரம் வருகிற 4-ந்தேதிக்குள் வெளியிடப்படும்.

    இதுவரை காணாத ஊழலை இனி வரும் 2 ஆண்டுகளில் தமிழகம் காணப்போகிறது. பா.ஜனதா வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து தி.மு.க. தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பா.ஜனதாவின் நோக்கமல்ல.

    புதிய கல்வி கொள்கை குறித்த புரிதல் அமைச்சர் பொன்முடிக்கு இல்லை. இதுகுறித்து அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக உள்ளேன். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்களை பா.ஜனதா பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிக்கலாம்....காஷ்மீர் பள்ளி ஆசிரியை கொலை விவகாரம்: ராகுல் புகார்- அமித்ஷா ஆலோசனை
    ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    சென்னை:

    டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜஷே்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவ நீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து 6 டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

    இதில் தி.மு.க. 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து 1 இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது.

    இதன்படி தி.மு.க. வேட்பாளர்களாக சு.கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25-ந்தேதி சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இது தவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

    இதில் தி.மு.க. , அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வருகிற 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதில் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வாபஸ் பெற வாய்ப்பு இல்லை என்பதால் வருகிற 3-ந்தேதி மாலை இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.

    6 எம்.பி.க்கள் பதவிக்கு கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் (தி.மு.க.), ப.சிதம்பரம் (காங்கிரஸ்), சி.வி.சண்முகம், தர்மர் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேர் மட்டுமே கட்சி சார்பில் களத்தில் நிற்பதால் இந்த 6 பேரும் வெற்றி பெற்றதாக 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.
    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

    மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

    கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

    கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

    தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

    பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய, பெண்கள் கல்வி நிதியுதவி திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கல்வியுரிமைதான் பெண்ணுரிமையின் கண் போன்றது. அதனால்தான் “திறன்மிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை உருவாக்க “நான் முதல்வன்” திட்டத்தை அறிவித்து, அதை இன்றைக்கு நம்முடைய அரசு எப்படியெல்லாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    அதிலும் குறிப்பாக தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை இன்றைக்கும் வரலாற்றிலே பேசக்கூடிய அளவிற்கு அவைகளெல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றன.

    இங்கே நம்முடைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம், இப்போது 50 சதவீதம், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம், ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத் தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்கிற சட்டம், இப்படி பல திட்டங்களைச் சொல்ல முடியும்.

    ஆகவே, பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத் தான் சுய உதவிக்குழு என்ற மாபெரும் திட்டத்தை கலைஞர் 1989-ம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றித் தந்தார்.

    அதே வழி நின்று, பெண்களுக்கு கல்லூரிக் கல்வி வழங்கியே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தான், அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய, பெண்கள் கல்வி நிதியுதவி திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

    நமது அரசைப் போலவே, இந்தக் கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதாக அமைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு உங்கள் அனைவரையும் பாராட்டி, வாழ்த்துகிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    ×