search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்கின்றன.

    இதனை தடுத்து நிறுத்தும் வகையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டாலும், அதற்கு எதிராக தனியரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில், தன்மைக்கேற்ப பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து உரிய சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும்,

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்போது-இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அறிகிறேன்.

    இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு வாயிலாக மோசடி நடப்பதாகவும், முதலில் ஆசையைத் தூண்டும் வகையில் பணம் கொடுக்கப்படும் என்றும், பின் கட்டிய பணம் எல்லாம் சூறையாடப்படும் என்றும், இது ஆன்லைன் விளையாட்டு அல்ல என்றும், இது ஆன்லைன் மோசடி என்றும், இதன் காரணமாக பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    பணத்தை இழந்து அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது என்றும், தங்களுக்கு பிடித்த நடிகர்-நடிகையர் விளம்பரம் செய்கின்றனர் என்பதற்காக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என்றும் காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    காவல் துறை தலைமை இயக்குநரே இதுபோன்று தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தை அணுகி இதனை உடனடியாகத் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முனைப்புடன் செயல்படாதது வருத்தமளிக்கும் செயலாகும்.

    லாட்டரி சீட்டு விற்பனையை பொறுத்தவரை நீதிமன்றத் தடை ஏதுமில்லாத சூழ்நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. அரசின் மெத்தனப் போக்கினைப் பார்க்கும்போது, ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

    ஏற்கெனவே, கொலை, தற்கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமைகள் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

    முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னாலும், கள நிலவரம் வேறு மாதிரியாகவுள்ளது. சூதாட்டம், போதை பொருட்கள், கள்ளச் சாராயம் கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

    முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை பெறவும்; மறைமுக லாட்டரி விற்பனையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும்; தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    2 ஆண்டுகளுக்கு பிறகு செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூடி கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது வழக்கம்.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அ.தி.மு.க. மேலிடம் தேர்தல் கமிஷனில் கால அவகாசம் கேட்டு இருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல், உள்கட்சி தேர்தல் காரணமாக இக்கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் கடந்த 3 மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மாவட்ட செயலாளர்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம், பேரூர் கிளை கழகங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    காலியாக இருந்த பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சி குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    கட்சி வளர்ச்சிக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும், கட்சி வலுப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    கட்சியில் நிலவும் உள்கட்சி மோதல் தொடர்பாகவும் ஒற்றுமையாக அனைவரும் செயல்படுவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது. முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் 2,500 பேரும், செயற்குழு கூட்டத்தில் 500 பேரும் சிறப்பு அழைப்பாளர்களாக 1000 பேரும் கலந்து கொள்ள உள்ளனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இனி வருங்காலங்களில் ஆங்கில விதிகள் வெளியிடப்படும் அதே சமயத்தில் அதற்கு இணையான தமிழாக்கம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உருவாக்கி உள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், ஊதிய சட்டத்தொகுப்பு விதிகள், தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு விதிகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு விதிகள் ஆகிய மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் தமிழ்நாடு அரசின் அசாதாரண அரசிதழில் 11-04-2022 அன்று ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான தமிழாக்கம் வெளியிடப்படவில்லை.

    இந்தச் சூழ்நிலையில், ஊதிய சட்டத் தொகுப்பு விதிகள் மற்றும் தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு விதிகள் குறித்த தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்ற மாத இறுதியில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும், கூட்டத்திற்கான அறிவிப்பு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தால் தமிழில் அனுப்பப்பட்ட நிலையில், மாநில வரைவு விதிகளின் தமிழாக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த தொழிற்சங்கங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    தமிழ் மொழியில் மாநில அரசின் வரைவு விதிகள் வழங்கப்பட்டால்தான், 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்றும், மாநில வரைவு விதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை ஒவ்வொரு தொழிலாளியும், தொழிற் சங்கங்களைச் சார்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவை தமிழில் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான், சட்டத் தொகுப்புகளில் உள்ள முக்கிய அம்சங்களைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தொழிலாளர் நல அதிகாரிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளைத் தெரிவிக்க முடியும் என்றும், சம்பிரதாயத்திற்காக கூட்டத்தைக் கூட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொழிலாளர்களும், தொழிற்சங்கவாதிகளும் கூறுகின்றனர்.

    ஆங்கிலத்தில் ஐம்பது பக்கம், நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு தொகுப்பையும் சாதாரண தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் படித்து புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று. மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாத தி.மு.க. அரசின் நடவடிக்கை சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்பது போல் உள்ளது. ஒரு வேளை இதுவும் ‘திராவிட மாடல்’ போலும்! தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற்படி மூன்று மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடவும், இனி வருங்காலங்களில் ஆங்கில விதிகள் வெளியிடப்படும் அதே சமயத்தில் அதற்கு இணையான தமிழாக்கம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பா.ஜ.க. குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது. பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தை நேற்று முன்தினம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து பேரவை மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த நிறைவு நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பா.ஜ.க. குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது:-

    உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டாம், கர்நாடகத்துக்கே காவிரி நீரை தர வேண்டும் என கர்நாடக பா.ஜ.க. கூறுகிறது. உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரி நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என தமிழக பா.ஜ.க. கூறினால் வரவேற்கலாம்.

    ஆனால் அ.தி.மு.க. பின்னுக்கு தள்ளப்படும் பிரசாரத்தை பா.ஜ.க. மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்றவற்றில் தமிழக பா.ஜ.க. குரல் எழுப்புவது இல்லை. இதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால் நாம் இதை செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் இதை பரப்ப வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு என்ற கருத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. அதை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபை தேர்தல் முடிவின் போது வெளிப்படையாக கூறினார். பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க. தோற்றது என்று பகிரங்கமாக கூறினார்.

    அ.தி.மு.க. அதிருப்தியாளர் புகழேந்தியும் இதே கருத்தை வலியுறுத்தினார். இந்த நிலையில் பொன்னையனும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    சென்னை:

    டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜஷே்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவ நீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து 6 டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

    இதில் தி.மு.க. 3 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து 1 இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது.

    இதன்படி தி.மு.க. வேட்பாளர்களாக சு.கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25-ந்தேதி சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இது தவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

    இதில் தி.மு.க. , அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாவிட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற அடிப்படையில் 7 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வருகிற 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதில் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் வாபஸ் பெற வாய்ப்பு இல்லை என்பதால் வருகிற 3-ந்தேதி மாலை இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.

    6 எம்.பி.க்கள் பதவிக்கு கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் (தி.மு.க.), ப.சிதம்பரம் (காங்கிரஸ்), சி.வி.சண்முகம், தர்மர் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேர் மட்டுமே கட்சி சார்பில் களத்தில் நிற்பதால் இந்த 6 பேரும் வெற்றி பெற்றதாக 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.
    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

    மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

    கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

    கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

    தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

    பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    வேட்பாளர்கள் இருவரும் இன்று காலையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காலை 10 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். தலைமைக்கழகத்தில் சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் அனைவரும் கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகமும், தர்மரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பங்கேற்றனர்.
    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.இளங்கோவன் (இவர் ஏற்கெனவே வகித்து வரும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்).

    ஓமலூர் மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மணி, எம்.எல்.ஏ.வும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

    அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்துக்கு 1 சதவீத சந்தை வரி விதிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு, புதிதாக பல பொருட்களை 1987-ம் ஆண்டைய தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்த்து, அதனை 25-ந்தேதி நாளிட்ட அரசிதழ் எண் 21-ல் வெளியிட்டு இருப்பதாகவும், இந்த அறிவிக்கையினுடைய இணைப்பின்படி, எல்லா வடிவ தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, குதிரைவாலி, வரகு, சாமை; எல்லா வடிவ பயறு வகைகளான உளுந்து, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, பட்டாணி, மொட்சை, காராமணி, கொள்ளு; எண்ணெய் வித்துக்கள்; தேங்காய் நார் போன்ற நார்ப் பொருட்கள்; கிழங்கு வகைகள்; சுவையூட்டும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள்; அனைத்து வகை கரும்பு வெல்லம், பனை வெல்லம், கச்சா ரப்பர், பூண்டு, மிளகாய் வத்தல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே விற்பனை செய்யப்படும் விளை பொருள்களுக்கும் ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டு இருப்பதாகவும் வியாபாரிகளும், வணிகச் சங்கங்களும் தெரிவித்துள்ளன.

    மேற்படி பொருட்களுக்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளும், பொருட்களை வாங்கும் வியாபாரிகளும்தான் என்றும், இதன் காரணமாக பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும், உளுந்து போன்ற பயறு வகைகள் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள வியாபாரிகளால் வியாபாரம் செய்யப்படுகிறது என்றும், இதற்கும் வரி கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு பிற மாநிலங்களில் சந்தை வரி விதிக்கப்படுவதில்லை என்றும், தமிழ்நாட்டில் இருந்து வெளியே செல்லும் அனைத்துப் பொருட்களுக்கும் சந்தை வரி கட்ட வேண்டும் என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றும், ஏற்கெனவே உள்ள பொருட்களுக்கு மட்டும் சந்தை வரி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், புதிதாக எந்தப் பொருளுக்கும் சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு சந்தை வரி விதிக்கக்கூடாது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அரசின் இதுபோன்ற நடவடிக்கை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வழி வகுக்காது. மாறாக குறைக்க வழிவகுக்கும். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் பாதிக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் வணிக விரோத கொள்கைக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, புதிதாக எந்த விளை பொருளையும் ஒரு விழுக்காடு சந்தை நுழைவு வரிக்கு உட்படுத்தாமல் இருக்கவும், பிற மாநிலங்களில் உள்ளது போன்று ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடக்கும் வியாபாரத்திற்கு ஒரு விழுக்காடு சந்தை வரி விதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    இதன்படி 2020-2021 ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கினை கட்சிகள் சமர்பித்தன.

    இதில் 31 பெரிய கட்சிகளின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 2020-2021-ம் ஆண்டில் மொத்தம் 149.95 கோடி நன்கொடை பெற்று மாநில கட்சிகளில் முதலிடத்தை பெற்று உள்ளது. இது நாடு முழுவதிலும் உள்ள மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 28 சதவீதம் ஆகும்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2019-2020-ல் அக்கட்சியின் வருமானம் 64.90 கோடியாக இருந்தது. இது தற்போது 149.95 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 131 சதவீதம் கூடுதலாகும். ஆனால் இந்த ஆண்டு வருமானத்தை விட தி.மு.க. அதிக அளவு செலவு செய்துள்ளது.

    தி.மு.க. மொத்தம் ரூ.218.49 கோடி செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.70 கோடியும், அ.தி.மு.க. ரூ.42.36 கோடியும் செலவிட்டு உள்ளது.

    தி.மு.க.வுக்கு அடுத்த படியாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 108 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி 2-வது இடத்தையும் ஒடிசாவில் உள்ள பிஜு ஜனதாதளம் ரூ.73 கோடி வருமானம் பெற்று 3-வது இடத்தையும் பெற்று உள்ளது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீதமும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 13 சதவீதமும் வருமானம் அதிகரித்து உள்ளது.

    அ.தி.மு.கவுக்கு வருமானம் குறைந்துள்ளது. 2019-2020-ல் 89 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.34 கோடியாக குறைந்துள்ளது.

    ஆனால் பா.ம.க. வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடியாகவும், ம.தி.மு.க. வருமானம் 1.5 கோடியில் இருந்து 2.86 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.

    இந்த வருமானம் அனைத்தும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    வருகிற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகரும் பா.ஜனதா அதற்கு கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிறைவேற்றப்பட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிதாக 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.

    நேரு விளையாட்டு அரங்கில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு முடிந்த பிறகு பிரதமர் மோடி காரில் சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் மோடியை சந்திக்க 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி வழி அனுப்பினார்.

    அதன்பிறகு அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் அ.தி.மு.க. தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா இடம்பெற்று இருப்பதால் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. பா.ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூட்டணியின் பலவீனம் என்பதை இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    2024-ம் ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இப்போதே பணியாற்ற வேண்டும். இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ‘உங்களுக்குள் இருக்கும் மனக்குறைகளை மனம் விட்டு பேசி தீருங்கள். இருவரும் இணைந்து செயல்படுங்கள். அதுதான் அ.தி.மு.க. எதிர்காலத்துக்கு நல்லது’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    தலைமை மீது நம்பிக்கை வராவிட்டால் தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். மக்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள். கட்சியை பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த ஆலோசனையின் போது சசிகலா பிரச்சினையும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அந்த 10 நிமிடமும் அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்வதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. பிறகு பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க. தலைவர்கள் விடைபெற்று சென்றார்கள்.

    ஏற்கனவே அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இடையே பனிப்போர் நடக்கிறது. கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷமும் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் பிரதமர் மோடி சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக விழாவுக்கு வந்த போது வரவேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே... எப்படி இருக்கீங்க என்று உரிமையுடன் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திலும் உரிமையுடன் அ.தி.மு.க. தலைவர்களுடன் நட்பு பாராட்டியதை அ.தி.மு.க. தலைவர்கள் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டனர்.

    வருகிற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி என்ற இலக்கை நோக்கி நகரும் பா.ஜனதா அதற்கு கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான அடித்தளமே நேற்றைய சந்திப்பு என்று கூறப்படுகிறது.

    அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக தீவிர ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது.
    சென்னை:

    மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்,  எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 2 எம்.பி.க்களை அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்க முடியும். வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த ஒரு மாதமாக தீவிர ஆலோசனை நடந்தது. எம்.பி. பதவி கேட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் 302 பேர் கடிதம் கொடுத்திருந்தனர்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களும், எம்.பி. பதவிக்கு குறி வைத்து ஆதரவு திரட்டினார்கள். இதனால் 2 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. 

    எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற சி.வி.சண்முகம்

    தீவிர ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளர்களாக சி.வி.சண்முகமும், தர்மரும் தேர்வு செய்யப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

    எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற ஆர்.தர்மர்

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சி.வி.சண்முகம் மற்றும் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியே சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    ×