search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami"

    • திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    • 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர்.
    • 15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் கீழ்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    13-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர். மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதி-துறையூர் சாலை, கனரா வங்கி அருகில், பெரம்பலூர் (வேன் பிரசாரம்), இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ்.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி தொகுதி-மாலை 4.30 மணிக்கு எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர், மாலை 5.30 மணிக்கு தியாக துருகம் ரோடு, யமாகா ஷோரூம் எதிரில் கள்ளக்குறிச்சி. இரவு 7 மணிக்கு விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் நகரம்.

    15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம், மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதியில் டானா தெரு, புரசைவாக்கம், இரவு 7 மணிக்கு சென்னை தெற்கு தொகுதி வேளச்சேரி ரோடு, சின்ன மலை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர்.
    • மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் தடா பெரியசாமி. இவர் திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் பா.ஜ.க.வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நான் தமிழக பா.ஜ.க.வில் மாநில பட்டியல் அணி தலைவராக பதவி வகித்தேன். நான் சிதம்பரம் தனி தொகுதியை சேர்ந்தவர். எனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர். நான் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்தும், அது எனது சொந்த தொகுதியாக இருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, பட்டியல் அணி தலைவருக்கே கட்சியில் மரியாதை இல்லை என்றால், இந்த சமுதாய மக்களுக்கு எப்படி மரியாதை இருக்கும். தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகிய 3 பேர் தான் முடிவு எடுக்கிறார்கள். கட்சியில் அவர்கள் 3 பேர் தான் இருக்கிறார்களா? வேறு யாரும் இல்லையா?

    எனவே எனக்கு மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். இனி அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடா பெரியசாமி கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    • தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
    • அனைத்து தொகுதிகளிலும் முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தேர்தல் களம் காண அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தி.மு.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றிருந்தது. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன.

    இப்படி தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை கிடைக்கவில்லை.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அ.தி. மு.க. கூட்டணி தோல்வியை தழுவி இருந்தது.

    இந்த நிலையில் தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கும் அ.தி.மு.க. பா.ஜனதாவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.

    தற்போதைய சூழலில் அ.தி.மு.க. அணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவது என்பது அந்த கட்சிக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    சென்னையை பொறுத்தவரையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் தி.மு.க.வே வெற்றி பெற்றது.

    இந்த தொகுதிகளில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி மட்டுமே தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம்.

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி 43 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் அ.தி.மு.க. வுக்கு 35 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளை ஒப்பிட்டு பார்த்தால் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது.

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 27 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

    இதே போன்று வடசென்னை தொகுதியில் 53 சதவீத வாக்குகளை தி.மு.க. கூட்டணி பெற்றிருந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கோ 25 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது.

    இப்படி கூட்டணி கட்சிகள் இருந்த நிலையிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு குறைந்த அளவிலேயே கடந்த தேர்தலில் வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்ததே முக்கிய காரணம் என்றும் தற்போது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இல்லாததால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் பாராளுமன்ற தேர்தலில் செயல்படுவோம் என்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது, "சென்னையில் 3 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற வகையில் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இதற்காக சென்னையில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கையில் எடுத்து அதனை தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக மக்கள் மத்தியில் மீண்டும் மதிப்பை பெற்று பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவரும் வகையில் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மூன்று தொகுதிகளிலும் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதனை தீர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வெற்றி பெற முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.


    இப்படி சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளையும் குறிவைத்து அ.தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது. இது எந்த அளவுக்கு தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.

    ஏனென்றால் தற்போதைய சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகளுமே இல்லாத நிலையே உள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் நிச்சயம் நிலைமை மாறும் என்றும் பெரிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் என்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி இது போன்று தமிழகம் முழுவதுமே யூகம் வைத்து வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்று முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    இது அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.
    • ‘வித்ஹோல்டு’ (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வருவதற்குள் இந்த அவசர கூட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். அவர்கள் கூறும்போது, சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.

    'வித்ஹோல்டு' (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார். எனவே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றனர்.

    இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த 10 மசோதாக்கள் தொடர்பாக மட்டும்தான் வழக்கு போடப்பட்டுள்ளதா? கவர்னரிடம் நிலுவையில் உள்ள மற்ற கோப்புகளுக்கு எதிராகவும் வழக்கு போடப்பட்டு உள்ளதா? என்றார்.

    இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த மசோதாக்கள் மற்றும் முன் விடுதலை தொடர்பாக நிலுவையில் உள்ள 50 கோரிக்கை தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    எடப்பாடி பழனிசாமி:-பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்தோம். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போது தி.மு.க. சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் அப்போதே தீர்வு கிடைத்து இருக்கும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:-பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் போது அரசிடம் கலந்து விவாதிக்கும் பழக்கம் அப்போது இருந்தது. தற்போது அது இல்லை என்பதே பிரச்சனை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டிருந்த மீன்வள பல்கலைக்கழகம் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    ஆனால் அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ஜெயலலிதா பெயரை நீக்கியதாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வெளிநடப்பு செய்துள்ளார்கள். மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை. நிலுவையில் உள்ளது" என்றார்.

    பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கழக குழு நிர்வாகிகள் தலைவராக சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி கழக குழு நிர்வாகிகள் நியமனம் பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்தின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக குழு நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கழக குழு நிர்வாகிகள் தலைவர் சதீஷ் குமார், (182-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) துணைத் தலைவர்கள் ஜான், (84-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) சத்தியநாதன் (145-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) செயலாளர் கார்த்திக், (7-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்) கொறடா கதிர்முருகன், (170-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ) பொருளாளர் சேட்டு (24-வது வார்டு மாமன்ற உறுப்பினர்).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    2 ஆண்டுகளுக்கு பிறகு செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூடி கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிப்பது வழக்கம்.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது.

    செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த அ.தி.மு.க. மேலிடம் தேர்தல் கமிஷனில் கால அவகாசம் கேட்டு இருந்தது. அதற்கு தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல், உள்கட்சி தேர்தல் காரணமாக இக்கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் கடந்த 3 மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மாவட்ட செயலாளர்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம், பேரூர் கிளை கழகங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    காலியாக இருந்த பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சி குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    கட்சி வளர்ச்சிக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும், கட்சி வலுப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    கட்சியில் நிலவும் உள்கட்சி மோதல் தொடர்பாகவும் ஒற்றுமையாக அனைவரும் செயல்படுவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது. முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் 2,500 பேரும், செயற்குழு கூட்டத்தில் 500 பேரும் சிறப்பு அழைப்பாளர்களாக 1000 பேரும் கலந்து கொள்ள உள்ளனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.இளங்கோவன் (இவர் ஏற்கெனவே வகித்து வரும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்).

    ஓமலூர் மேற்கு ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மணி, எம்.எல்.ஏ.வும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் ஆர்.மணி எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

    அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி நாளை மாலை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்கள்.

    அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.

    இதையடுத்து பிரதமர் மோடியுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசக்கூடும் என்று தெரிகிறது.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபையில் 57 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் மேல்சபை எம்.பி. பதவியை கேட்டு வருகிறார். அதுபோக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் எம்.பி. பதவிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளும் பதவி கேட்கிறார்கள்.

    இதுதொடர்பாக இன்று சோனியா, ராகுல் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த சில தினங்களாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. வேட்பாளர் தேர்வில் அவர்கள் இருவருமே பிடிவாதமாக இருப்பதால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    வேட்பாளரை முடிவு செய்வதற்காக சமீபத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் 27 பேர் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி பேசினார்கள். வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். என்றாலும் அந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஏக மனதாக தேர்வு செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.

    அ.தி.மு.க. வேட்பாளர் 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மற்றொருவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக உள்ளார். ஆனால் இந்த விசயத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

    அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் மேலும் ஒருவரை தேர்வு செய்வதில்தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அ.தி.மு.க.வின் மற்றொரு வேட்பாளராக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்புகிறார்கள். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சி.வி. சண்முகத்துக்கு வாய்ப்பு அளித்தால் மேல்சபை எம்.பி.க்கள் இருவருமே வட மாவட்டத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதை ஏற்க இயலாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சொல்கிறார்கள். எனவே தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் தனக்கு மேல்சபை எம்.பி. பதவி வேண்டும் என்று இன்பதுரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.

    சையது கானை எம்.பி.யாக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. சையதுகான் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவரை எம்.பி. ஆக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் வேட்பாளர் தேர்வு தள்ளி போகிறது. நேற்று இதில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.வி. சண்முகம் தொடர்ந்து வலியுறுத்துவதால் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து சிக்கல் நீடித்தபடி உள்ளது.

    மேல்சபை எம்.பி. பதவிக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதால் அதற்குள் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர்.

    இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு மீண்டும் மீண்டும் தள்ளி போகிறது. எனவே மனுதாக்கல் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ×