search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    அவனியாபுரத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்த முருகேசன் (வயது56), ரமேஷ் (55) ஆகிய 2 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர்.
    கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
    மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அசாம் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையின் குழு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    மேற்கொண்டு விசாரணைக்காக ஹியாங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில்கள் இயக்கம்
    சென்னை நெசப்பாக்கத்தில் மின்வாரிய ஊழியர் மீதான தாக்குதல் தொடர்பாக பாரதிய ஜனதா பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போரூர்:

    சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஆட்டோ “டிங்கரிங்” கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரும் மின்வாரிய தற்காலிக ஊழியருமான கோகுல் என்பவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி விஜயகுமார் என்கிற குல்லா விஜி ஆனந்தின் கடையை மறைத்து வரிசையாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்த், கோகுல் இருவரும் தட்டிக் கேட்டனர் இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மின் வாரிய ஊழியர் கோகுலை சரமாரியாக தாக்கினார். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கோகுல் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கோகுலை தாக்கிய விஜயகுமார் அவரது நண்பர்களான கோபி, சூர்யா, தனுசன் ஆகிய 4பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசியது உள்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    எம்.ஜி.ஆர். நகரில் வியாபாரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சினிமா படம் பார்க்க சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் சக்திவேல் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ1.45லட்சம் பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழவேசம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட ஆலந்தூர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, அப்புனு என்கிற சரத், சண்முகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதே கும்பல் ஏற்கனவே கடந்த 21-ந் தேதி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில் உள்ள பெரியார் தெருவில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை சுருட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அம்பத்தூரில் வாலிபர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார் (28). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு உதயகுமார் மோசசின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை அடித்து அங்கிருந்து கடத்தி சென்று அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயகுமாருக்கு, மோசசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகின்றனர்.

    இக்கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சரண், அவரது நண்பர் அப்புன், ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து டாக்டர் வீட்டில் நகை-பணம் திருடிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டாக்டர் தங்கவேலு வீதியைச் சேர்ந்தவர் விஷ்ணுதீபக் (44). தனியார் ஆஸ்பத்திரி டாக்டர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு யோகசந்திரன் என்ற மகன் உள்ளார். டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை டாக்டர் சந்திரன். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே கிளினிக் நடத்தி வருகிறார். டாக்டர் விஷ்ணுதீபக் தனது மகனுக்கு மொட்டை போடுவதற்காக கடந்த 22-ந் தேதி குடும்பத்துடன் விருதாச்சலத்துக்கு சென்று விட்டார்.

    மீண்டும் நேற்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதையடுத்து அவர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த வீட்டில் துப்பறியும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்களை துப்பறியும் மோப்பநாய் கண்டுபிடிக்க முடியாத வகையில் வீட்டில் மிளகாய் பொடிகளையும் தூவி இருந்தனர். இதையடுத்து வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

    மேலும் திருட்டு நடந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள மற்ற இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் டாக்டர் விஷ்ணு வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டாக்டரின் கிளினீக்கில் வேலை பார்க்கும் வசந்தகுமார் என்ற ஊழியர் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடிய போது அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். மேலும் போலீசாரை கண்டதும் பதட்டத்தில் இருந்தார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் வலுக்கவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வசந்தகுமார் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    இது குறித்து அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் தந்தை சந்திரன் நடத்தி வரும் கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறேன். இதனால் அடிக்கடி நான் டாக்டர் விஷ்ணுதீபக்கின் வீட்டுக்கும் சென்று வந்தேன். இதனால் அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகினேன். அப்போது டாக்டர் விஷ்ணு தீபக் வீட்டில் அதிக அளவில் நகை-பணம் இருப்பது எனக்கு தெரிய வந்தது.

    எனவே அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி காத்து இருந்தேன். அதன்படி கடந்த 22-ந் தேதி டாக்டர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை பயன்படுத்தி கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக கோவை சுந்தரா புரத்தைச் சேர்ந்த எனது தம்பி அருண்குமார் (24), அவரது நண்பர்கள் பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகியோரை அழைத்தேன். அவர்கள் ஒரு கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தனர். பின்னர் நாங்கள் 4 பேரும் சேர்ந்து காரை ஓரமாக நிறுத்தி விட்டு டாக்டர் வீட்டின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து குளியல் அறையில் இருந்த வெண்டிலேட்டரை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தோம்.

    பின்னர் சாவி போட்டு வீட்டின் பீரோவில் இருந்த லாக்கரை திறந்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு சென்று விட்டோம். பின்னர் அந்த பொருட்களை நாங்கள் பங்கு போட்டுக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வசந்தகுமார், அருண்குமார் (24), பிரவின்குமார் (26), பிருத்விராஜ் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டாக்டர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டினார்.

    அரசு மதுபான பாரில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் ஜீவன் லால் நகர் எதிரில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. அதையொட்டி உள்ள மதுபான பாரில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மதுபான பாரில் சென்று சோதனையிட்டபோது கையில் துண்டு சீட்டு மற்றும் செல்போன் வைத்து ஒருநம்பர் லாட்டரிச் சீட்டு விற்று கொண்டிருந்த பார் ஊழியர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ஆதிகேசவலு நாயுடு. இவர் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவராக இருந்தார்.

    இவரது மகன் சீனிவாஸ் (வயது 45). இவர் நேற்று ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீனிவாசனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் பெங்களூரில் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

    இதையடுத்து சீனிவாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    சீனிவாஸ் கைது குறித்து போலீசார் கூறுகையில்:-

    ஐதராபாத் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய பிரமுகர்களுக்கு சீனிவாஸ் போதை பொருள் சப்ளை செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சீனிவாஸ் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைபொருட்கள் சப்ளை செய்தது உறுதியானது.

    இதையடுத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவரின் மகன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய அரிவாளுடன் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படைபோலீசார் இன்று காலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

    அங்கு 7பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்த அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்,புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த இசாக், திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் பெரம்பூரை சேர்ந்த 3 பேரை தீர்த்து கட்ட அரிவாளுடன் பதுங்கி இருந்தது. விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோருக்கும் பெரம்பூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்றுமாலை தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த மோதலில் பெரம்பூரை சேர்ந்த 3 வாலிபர்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய நபர் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் கே.2 என்ற அரசு பஸ்  குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விஸ்வநாதன் ஓட்டினார்.

    குப்பாண்டபாளையம்  பஸ் நிறுத்தம் அருகே  ெமாபட்டில் வந்த குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம்  (53) திடீரென அரசு பஸ்சை வழிமறித்தார்.

     பின்னர் சுந்தரம்  அந்த பஸ்சில் ஏறி , டிரைவர் விஸ்வநாதனை தகாத வார்த்தையில் பேசி, முகத்தில் பலமாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். 

    இது குறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் , சுந்தரத்தின் உறவுக்கார பெண் ஒருவர் பஸ்சில் கூட்டமாக இருந்ததால் பஸ்சில் ஏற முடியவில்லை. 

    இது பற்றி அந்த பெண் சுந்தரத்திடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம்  அரசு பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தனர்.
    ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ் என்பவரை கடந்த மே மாதம் 9-ந் தேதி முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச்சேர்ந்த ஜான்மனோஜ் (வயது 29), அலெக்சாண்டர் (27), ஜஸ்டின் பவுல்ராஜ் (24), ரொசாரியோ பிராங்க்ளின் (23), அலெக்சாண்டர் (27), அந்தோணி ரெய்மண்ட் (27), ரூபன்லூர்துராஜ் (28) ஆகியோர் சேர்ந்து வழிமறித்து தடியால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்ய முயற்சி செய்தது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.

    எனவே மேற்படி நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், அடிதடி சண்டை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கி வந்தனர்.

    மேலும் இவர்கள் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்கண்ட 7 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கஉத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரையில் 8-ம் வகுப்பு மாணவனை வாலிபர், கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. 

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    கோரிப்பாளையம் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் நேற்று இரவு வீட்டின் முன்பு சைக்கிளை துடைத்து கொண்டிருந்தான். அப்போது அவனை ஒரு வாலிபர் கத்திமுனையில் குடோனுக்கு தூக்கி சென்றார். அங்கு அவர் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. சிறுவன் சத்தம் போடவே, வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிறுவனின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டது, மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த  வாலிபர் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, செல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

    அவர் மீனாம்பாள்புரம், அழகர் மகன் ரஞ்சித் குமார் (20) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    ×