என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எம்.ஜி.ஆர். நகரில் வியாபாரி வீட்டில் கொள்ளை- 3 வாலிபர்கள் கைது
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சினிமா படம் பார்க்க சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் சக்திவேல் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ1.45லட்சம் பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழவேசம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட ஆலந்தூர் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, அப்புனு என்கிற சரத், சண்முகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதே கும்பல் ஏற்கனவே கடந்த 21-ந் தேதி எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில் உள்ள பெரியார் தெருவில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை சுருட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்