search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    அரசு மதுபான பாரில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற பார் ஊழியர் கைது

    அரசு மதுபான பாரில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் ஜீவன் லால் நகர் எதிரில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. அதையொட்டி உள்ள மதுபான பாரில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மதுபான பாரில் சென்று சோதனையிட்டபோது கையில் துண்டு சீட்டு மற்றும் செல்போன் வைத்து ஒருநம்பர் லாட்டரிச் சீட்டு விற்று கொண்டிருந்த பார் ஊழியர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×