search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு"

    • இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.
    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.

    சேலம்:

    ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்மனை வழிபட ஏற்ற காலம் என்றாலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரக் கூடியதாகும்.

    பெண்கள் வழிபாடு

    அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர். அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வளையல் அலங்காரம்

    அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் கோவி லில் சிவன் குடும்ப அலங்கா ரமும், எல்லை பிடாரி அம்மன் கோ விலில் அம்ம னுக்கு வளையல் மற்றும் தங்க கவச அலங்காரமும், அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்ம னுக்கு வளையல் அலங்கா ரமும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதே போல் சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
    • அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆடி மாதம் தற்போது பிறந்ததையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நாளை (22-ந்தேதி) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுவதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வையார் அம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு கொழுக் கட்டை, கூழ் கஞ்சி படைத்து வழிபாடு செய்ய வும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெண்கள் அம்மனுக்கு பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து வழிபடவும் தயாராகி வருகிறார்கள்.

    கொட்டாரம் கீழத்தெரு வில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி இந்த கோவிலில் நாளை காலை 8.45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு கஞ்சி தானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாரா தனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் அர்ச்சனையும் நடக்கிறது. 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடக்கிறது.

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப் பட்டு மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணி விக்கப்பட்டு அலங்காரத்து டன் சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

    முன்னதாக விநாயக ருக்கு முதல் பூஜை நடக் கிறது. அதன்பிறகு முத் தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் இந்த கோவிலில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, பலவேச காரசுவாமி, முண்டன்சுவாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்வார்கள். பின்னர் பக்தர்களுக்கு அந்த வளை யல் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பார்வதி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு அம்மன் பிறந்த நட்சத்திர மான பூரம் நட்சத்திரமான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுகிறது. இதையொட்டி நாளை காலை 10.30 மணிக்கு பார்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    இரவு 7 மணிக்கு ஊஞ்சல் வழிபாடு நடக் கிறது. அப்போது பார்வதி அம்பாளை அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. 8 மணிக்கு பள்ளியறை வைபவம் நடக்கிறது. இந்த வைபவத்தின்போது சுவாமியும், அம்பாளும் பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.

    மேலும் ஆடிப்பூரத்தை யொட்டி குமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படு வதையடுத்து தோவாளை மார்க்கெட்டுகளில் பூ விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட் சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத் தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் மண்டலாபி ஷேக 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வல மாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் அமைக்கப்பட்டது. 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்கு களுக்கு புனித நீர் ஊற்றி மலர்கள் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர்.மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரி யம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத கடைசி தேய் பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமா னுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத கடைசி தேய் பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமா னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வ ரர் மற்றும் பரிவார தெய் வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரமேஸ்வர் , பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல் பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோயி லில் எழுந்தருளியுள்ள பர்வ தீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதி களில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத தேய்பிறை சனிபிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது
    • விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயிஅம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் திருக்கோவில், ராஜா கோவில், திருவேலீஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன் மற்றும் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அனைத்து சமூக மக்கள் சகோதரத்துவ நட்புறவு மேம்பாட்டிற்காக சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி ஊர் கவுண்டர் மூர்த்தி, கரக்காரர் ஞானசூரியன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகி ஜவஹர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    மலர்மாலை அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர் களுக்கும், அ.வாழப்பாடி கரக்காரர் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்

    பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்த துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத் திட்ட முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை முதற்கட்டமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்திற் குட்பட்ட 4 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண் களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன் னோக்கு மருத்துவ ஆலோ சனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் நாகர்கோ வில் மாநகராட்சி பகுதியில் ஏழகரம் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கொட் டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நி லைப்பள்ளி, விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி, பரக்குன்னு ஆகிய நான்கு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற உள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பையஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், நாகர்கோவில் மாநகர்நல அலுவலர் டாக்டர் ராம் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு, சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்னசிறப்பு அபிஷேகம்வெங்கட்ரமணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.
    • அகண்ட தீப வழிபாட்டால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.

    வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழி முறையை கூறி உள்ளனர்.

    அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.

    தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

    ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது.

    இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும். நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும்.

    இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    • நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்ரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்கள் 10வது நாள் விஜயதசமி என்று கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள். அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும்.

    நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். அதற்குரிய பொருட்களான மஞ்சள் பொடி, சந்தனம், உதிரிமலர், ஊதுவத்தி, பஞ்சுதிரி, கற்பூரம், வெல்லம், அரிசி, தயிர், தேன், குங்குமம், புஷ்பமாலை, வெற்றிலைப்பாக்கு, சாம்பிராணி, நல்லெண்ணெய், அரிசி, வாழைப்பழம், தேங்காய், பூஜைக்குரிய மணி, தாம்பாளம், கற்பூர தட்டு, பஞ்சபாத்ர உத்தரணி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளைச் சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்தின் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக் களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பா விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்கள் வருமாறு:

    முதல் நாளுக்குரிய போற்றி

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    இரண்டாவது நாள் போற்றி

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகிலிருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!-

    மூன்றாம் நாள் போற்றி

    ஓம் அறிவினுக்கறிவேபோற்றி

    ஓம் ஞானதீபமேபோற்றி

    ஓம் அருமறைப் பொருளேபோற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி

    ஓம் நறும்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி

    ஓம் பரமனின் சக்தியேபோற்றி

    ஓம் பாபங்கள் களைவாய்போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளேபோற்றி

    ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையேபோற்றி

    நான்காவது நாள் போற்றி

    ஓம் கருணை வடிவேபோற்றி

    ஓம் கற்பகத் தருவேபோற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி

    ஓம் கரும்பின் சுவையேபோற்றி

    ஓம் கார்முகில் மழையேபோற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி

    ஓம் பகைக்குப் பகையேபோற்றி

    ஓம் ஆவேசத் திருவேபோற்றி

    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி

    ஓம் நாரணன் தங்கையேபோற்றி

    ஓம் அற்புதக் கோலமேபோற்றி

    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி

    ஓம் புகழின் காரணியேபோற்றி

    ஓம் காக்கும் கவசமேபோற்றி

    ஓம் ரோகிணி தேவியேபோற்றி

    ஐந்தாம் நாள் போற்றி

    ஓம் வீரசக்தியே போற்றி

    ஓம் திரிசூலியே போற்றி

    ஓம் கபாலியே போற்றி

    ஓம் தாளிசினியே போற்றி

    ஓம் கௌரி தேவியே போற்றி

    ஓம் உத்தமத் தாயே போற்றி

    ஓம் தர்மம் காப்பவளே போற்றி

    ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி

    ஓம் மெய்ஞான விதியே போற்றி

    ஓம் தாண்டவத் தாரகையே போற்றி

    ஓம் போற்றுவோர் துணையே போற்றி

    ஓம் பச்சைக் காளியே போற்றி

    ஓம் பவள நிறத்தினாய் போற்றி

    ஓம் ஆகாய ஒளியே போற்றி

    ஓம் பூதங்கள் உடையோய் போற்றி

    ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளே போற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளே போற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி

    ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி

    ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி

    ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி

    ஓம் அகிலலோக நாயகி போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி

    ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி

    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி

    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி

    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி

    ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி

    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி

    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் சாம்பவி மாதே போற்றி

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளே போற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி

    ஓம் அண்டர் போற்றும் அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் மாயோனின் மனம் நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி! போற்றி!!

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

    • சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
    • பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

    முதலாம் நாள்: சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

    முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

    இரண்டாம் நாள்: இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

    இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.

    மூன்றாம் நாள்: மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

    மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.

    நான்காம் நாள்:-சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.

    ஐந்தாம் நாள்: ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

    ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.

    ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

    ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.

    ஏழாம் நாள்: ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.

    ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.

    எட்டாம் நாள்: அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

    எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.

    ஒன்பதாம் நாள்: அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

    ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்

    இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.

    அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.

    மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் "படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்" என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.

    "தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்" என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.

    சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.

    ×