search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
    X

    பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    • பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்ட மங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு, சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசன்னசிறப்பு அபிஷேகம்வெங்கட்ரமணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×