search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பூரத்தையொட்டி"

    • ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
    • அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆடி மாதம் தற்போது பிறந்ததையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அம்மன் பிறந்த நாள் அன்று ஆடி பூர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    நாளை (22-ந்தேதி) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுவதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வையார் அம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி யம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு கொழுக் கட்டை, கூழ் கஞ்சி படைத்து வழிபாடு செய்ய வும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெண்கள் அம்மனுக்கு பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து வழிபடவும் தயாராகி வருகிறார்கள்.

    கொட்டாரம் கீழத்தெரு வில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி இந்த கோவிலில் நாளை காலை 8.45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு கஞ்சி தானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாரா தனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் அர்ச்சனையும் நடக்கிறது. 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடக்கிறது.

    கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நாளை நடக்கிறது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப் பட்டு மாலை 6 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணி விக்கப்பட்டு அலங்காரத்து டன் சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

    முன்னதாக விநாயக ருக்கு முதல் பூஜை நடக் கிறது. அதன்பிறகு முத் தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் இந்த கோவிலில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, பலவேச காரசுவாமி, முண்டன்சுவாமி ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்வார்கள். பின்னர் பக்தர்களுக்கு அந்த வளை யல் பிரசாதமாக வழங்கப் படுகிறது.

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பார்வதி அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு அம்மன் பிறந்த நட்சத்திர மான பூரம் நட்சத்திரமான நாளை (சனிக்கிழமை) ஆடிப்பூர விழா கொண்டா டப்படுகிறது. இதையொட்டி நாளை காலை 10.30 மணிக்கு பார்வதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    இரவு 7 மணிக்கு ஊஞ்சல் வழிபாடு நடக் கிறது. அப்போது பார்வதி அம்பாளை அலங்கரிக் கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. 8 மணிக்கு பள்ளியறை வைபவம் நடக்கிறது. இந்த வைபவத்தின்போது சுவாமியும், அம்பாளும் பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவை யினர் செய்து வருகிறார்கள்.

    மேலும் ஆடிப்பூரத்தை யொட்டி குமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படு வதையடுத்து தோவாளை மார்க்கெட்டுகளில் பூ விலையும் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    ×