search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sushma Swaraj"

    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி இன்று திறந்து வைத்தார். #YogiAdityanath #KimJungSook
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

    இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் நேற்று பிரதமர் நரேந்திர மோடிம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

    நேற்றிரவு உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

    அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் இன்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.



    இந்த திறப்பு விழாவின்போது இந்தியா மற்றும் தென்கொரியா நாட்டு கலைக்குழுவினர் நடத்திய நடன நிகழ்ச்சியை யோகி ஆதித்யாநாத், கிம் ஜங்-சூக் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.

    இன்றிரவு சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார். பின்னர், டெல்லி திரும்பும் அவர் தனிவிமானத்தில் தென்கொரியாவின் சியோல் நகருக்கு புறப்பட்டு செல்கிறார். #YogiAdityanath #KimJungSook #QueenHuh #QueenHuhMemorial 
    அயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். #SouthKoreanFirstLady #KimJung-sook #Modi
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.



    இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். #SouthKoreanFirstLady #KimJungsook #Modi
    அயோத்தியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
     
    நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.

    இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

    பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள ஏ.எஸ்.என் பள்ளிக்கு சென்றார். அங்கு உள்ள மாணவ- மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

    இன்று மாலை உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேரும் அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார்.



    லக்னோவில் இருந்து நாளை அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார்.

    பின்னர், அயோத்தியில் ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா என்பவர் தென் கொரியாவுக்கு சென்று அந்நாட்டு மன்னரை மணந்த பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறார்.

    தென்கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
    கத்தார் பயணத்தை நிறைவுசெய்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று குவைத் நாட்டின் அமிர் (ஆட்சியாளர்) மற்றும் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwarajinKuwait #KuwaitAmir
    குவைத் சிட்டி:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றார்.

    கத்தார் பயணத்தை நிறைவுசெய்த சுஷ்மா சுவராஜ், இன்று குவைத் நாட்டின் அமிர் (ஆட்சியாளர்) ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-ஜாபெர் அல்-சபா மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஜபார் அல் முபாரல் அல் ஹமாத் அல் சபா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    மேலும், துணை பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் சபாஜ் காலித் அல்-ஹமாட் அல்-சபாஹ் ஆகியோரையும் அவர் சந்தித்தார். குவைத்தில் வாழும் சுமார் 8 லட்சம் இந்தியர்களின் நலன் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறை கூட்டுறவு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.  

    இந்த சந்திப்புக்கு பின்னர் சுஷ்மா தனி விமானம் மூலம் இன்று மாலை டெல்லி புறப்பட்டார். #SushmaSwarajinKuwait #KuwaitAmir
    கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் 4 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். #SushmaSwarajdeparts #SushmaSwarajKuwaitvisit
    புதுடெல்லி:

    இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதம் அளவுக்கு கத்தார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரில் வாழும் மக்கள்தொகையில் 27 சதவீதம் அளவுக்கு இங்கு சுமார் 7 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி, வசித்து வருகின்றனர்.

    இதேபோல், இந்தியாவுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணைய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் வாழ்கின்றனர்.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கத்தார், குவைத் நாடுகளில் 4 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கத்தார் மற்றும் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் அழைப்பை ஏற்று சுஷ்மா சுவராஜ் இன்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக இன்றும் நாளையும் கத்தாரில் தங்கியிருக்கும் சுஷ்மா, 30,31 ஆகிய தேதிகளில் குவைத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கத்தார், குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மற்றும் இரு நாடுகளின் அமிர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். #SushmaSwarajdeparts #SushmaSwarajKuwaitvisit #SushmaSwarajQatarvisit
    பெண் பத்திரிகயாளர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியான புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #Metoo #MJAkbar
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில்  டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிடிருந்தார்.

    இந்நிலையில், இன்று மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.

    தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக  தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். #Metoo #MJAkbar
    தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    துஷ்பாண்டே:

    இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    தஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். 

    இந்த மாநாட்டில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியா தீபகற்ப பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடினை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவையும் சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷியா நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. #VladimirPutin #SushmaSwaraj
    புதுடெல்லி:

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.



    இதனை அடுத்து, பிரதமரின் இல்லத்துக்கு வந்த புதினை மோடி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர்,  இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இந்த சந்திப்பில் இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin #SushmaSwaraj
    ஐ.நா.வில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தடைபட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். #UN #SushmaSwaraj #Pakistan
    வாஷிங்டன்:

    ஐ.நா.வின் 73-வது பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, பேச்சுவார்த்தையின் மூலமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இந்தியா, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நாசப்படுத்தியதாக கூறுவது உண்மைக்கு புரம்பானது என தெரிவித்துள்ளார்.

    இந்தியா பாகிஸ்தான் இடையே பலமுறை பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டதாகவும், பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டால் அதற்கு முழு காரணம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் முறைதான் எனவும் சுஷ்மா சுவராஜ் கடுமையாக தாக்கியுள்ளார்.

    இந்தியாவில் ஏற்பஅ ஒவ்வொரு அரசும் பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட முயற்சித்து வந்ததாகவும், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் தானே நேரடியாக சென்று இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், 2017 ஜனவரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலை பரிசாக அளித்ததாகவும் சுஷ்மா சுவராஜ் கடுமையாக சாடியுள்ளார்.



    மேலும், இந்த முறை புதிய பிரதமர் இம்ரான் கானின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்ற சிறிது நேரத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலி என செய்திகள் வெளியாகிறது. இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு மத்தியில் எவ்வாறு அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவது? என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.

    மேலும், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவது பாகிஸ்தானின் திறைமைகளில் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார். #UN #SushmaSwaraj #Pakistan
    ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் எனும் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பபட வேண்டும் எனில் பிராந்திய ஒத்துழைப்பிற்கு சமூக அமைதியும், பாதுகாப்பும் இன்றியமையாதது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு சமூகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார்.

    ஆனால், அவரது பேச்சு நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் உரையை கேட்காமல் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறி ப்ரிக்ஸ் அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டார்.

    சுஷ்மாவின் செயலை மறைமுகமாக கண்டித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, பிராந்திய ஒத்துழைப்பிற்கு எதிராக இந்தியா தடைகளை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கூட்டத்தின் பாதியிலேயே அவர் (சுஷ்மா) வெளியேறியதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி அவர் இந்த கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு தடை    ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும் ?.

    சார்க் அமைப்பின் செயல்திட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றிகளை பற்றி பேச நான் தயங்கவில்லை. ஆனால், பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரேஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் தெரிவித்துள்ளார். #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA
    நியூயார்க் :

    ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மீறி இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை குறைக்க இந்தியா திட்டமிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

    கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். ஒருவேளை அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும் அந்த விலக்கு குறைந்த காலத்துக்கு தான் வழங்கப்படும் என மைக் பாம்பியோ கூறினார்.

    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்பின் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்பது அமெரிக்காவின் உத்தரவு.

    இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய முகமது ஜாவத், ஈரானிடம் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ எங்கள் இந்திய நண்பர்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி போன்றவற்றை நோக்கத்தின் அடிப்படையில் செய்பவர்கள். இதே கருத்தைத் தான் சுஷ்மா சுவராஜூம் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் இந்தியாவுடன் விரிவான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

    இந்த ஒத்துழைப்பு எரிசக்தி துறையிலும் தொடர்கிறது. ஏனென்றால், இந்தியாவின் நம்பகமான எரிசக்தி வினியோகஸ்தராக ஈரான் எப்பொழுதும் இருந்து வருகிறது. எனவே, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா தொடரும்’ என அவர் தெரிவித்தார்.

    ஈரானிடன் இருந்து சீனாவுக்கு அடுத்ததாக அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியாவாகும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பிறகு ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை இந்தியா  குறைத்துள்ளதே தவிற முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA
    அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என ஐநா பொதுசபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். #SushmaSwaraj #UNGA
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் இன்று தொடங்கியது.

    இதில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். அங்கு நெல்சன் மண்டேலா அமைதி உச்சிமாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார். இந்திய அரசாங்கம் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கெளரவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் காந்தியடிகளும், மண்டேலாவும் அமைதி வழியில் பொதுமக்கள் விடுதலைக்காக  போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.



    பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும்  பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார்.

    இந்த கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. #SushmaSwaraj #UNGA
    ×