என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐ.நா"
- விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.
- விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் அமைதி பெறுவதே ஐநா சபையின் நோக்கமாகும்
வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 - ந்தேதி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாழ்வில் விளையாட்டு நேர்மறையான பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இன்று 6 -ந்தேதி இந்த 2024- ம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு, சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2013 -ல் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் ஏப்ரல் 6 -ந் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் மூலம் ஏற்படும் உடல் வலிமை, மனஅமைதியை ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இதன்காரணமாக தனிநபர் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து, பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி வருகிறது.
உலக அளவிலான விளையாட்டுகள், மற்றும் சிறு விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் நபர்களால் விளையாட்டு போட்டிகள் மேம்படுத்தப்படுகிறது. விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.
விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் எளிதில் அமைதி பெறுவதே ஐநா பொது சபையின் நோக்கமாகும்.
இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 6- ந்தேதியை ஐ.நா பொது சபை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக (IDSDP) அறிவித்து உள்ளது.
இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன.மனித சமுதாய வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது. இந்த தினத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் உலகம் முழுவதும் அமைதி பெற நாம் அனைவரும் சபதமேற்போம்.
ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆசிய கண்டத்தில் இறக்கும் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வீதம் ஆப்ரிக்காவில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
குணப்படுத்தக்கூடிய மலேரியா போன்ற நோய்களாலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் அதிகம் உயிரிழப்பதாகவும் ஐ.நா குழு வேதனை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விபத்துக்களினாலும், நீரில் மூழ்குவதாலும் இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவிலான நாடுகளில் கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவு அற்ற பெற்றோர்களினால் தங்கள் குழந்தைகளை முறையாக பேண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக பேசிய உலக வங்கியின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை இயக்குனர் டிம் எவான்ஸ், குணப்படுத்த முடியும் காரணங்களால் ஏற்படும் மரணங்களை தடுப்பதிலும், குழந்தைகள் நலத்தில் முதலீடு செய்வதிலுமே நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட முடியும் என குறிப்பிட்டுள்ளார். #UnitedNation
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்