search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "April 6 Development & Peace"

    • விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.
    • விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் அமைதி பெறுவதே ஐநா சபையின் நோக்கமாகும்

    வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 - ந்தேதி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள  மக்கள் வாழ்வில் விளையாட்டு நேர்மறையான பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இன்று 6 -ந்தேதி இந்த 2024- ம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு,  சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.




    2013 -ல் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் ஏப்ரல் 6 -ந் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் மூலம் ஏற்படும் உடல் வலிமை, மனஅமைதியை ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இதன்காரணமாக தனிநபர் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து, பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி வருகிறது.

    உலக அளவிலான விளையாட்டுகள், மற்றும் சிறு விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் நபர்களால் விளையாட்டு போட்டிகள் மேம்படுத்தப்படுகிறது. விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.

    விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் எளிதில் அமைதி பெறுவதே ஐநா பொது சபையின் நோக்கமாகும்.



    இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 6- ந்தேதியை ஐ.நா பொது சபை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக (IDSDP) அறிவித்து உள்ளது.

    இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன.மனித சமுதாய வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது. இந்த தினத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் உலகம் முழுவதும் அமைதி பெற நாம் அனைவரும்  சபதமேற்போம்.

    ×