search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shah mehmood qureshi"

    • தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.
    • தனது சிறை தண்டனையை எதிர்த்து இம்ரான் கான் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து கடந்த 5-ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஷா மக்மூத் குரேஷி அவரது வீட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    முன்னாள் பிரதமரும், கட்சித் தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்ட இரு வாரங்கள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குரேஷி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடனான எந்த பிரச்சனையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி  அமெரிக்கா சென்றுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக இந்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி , அமைதிக்கான வழியில் இந்தியா ஓரடி முன்னெடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

    நாங்கள் அமைதிக்கான முதலடியை எடுத்து வைத்தோம். இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருநாடுகளுமே அணு ஆயுத வலிமைமிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சனைகளை போரினால் சரிசெய்ய முடியாது.

    போர்முறை என்பது இதில் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi 
    ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் எனும் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பபட வேண்டும் எனில் பிராந்திய ஒத்துழைப்பிற்கு சமூக அமைதியும், பாதுகாப்பும் இன்றியமையாதது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு சமூகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார்.

    ஆனால், அவரது பேச்சு நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் உரையை கேட்காமல் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறி ப்ரிக்ஸ் அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டார்.

    சுஷ்மாவின் செயலை மறைமுகமாக கண்டித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, பிராந்திய ஒத்துழைப்பிற்கு எதிராக இந்தியா தடைகளை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கூட்டத்தின் பாதியிலேயே அவர் (சுஷ்மா) வெளியேறியதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி அவர் இந்த கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு தடை    ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும் ?.

    சார்க் அமைப்பின் செயல்திட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றிகளை பற்றி பேச நான் தயங்கவில்லை. ஆனால், பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரேஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்தது துரதிஷ்டவசமான செயல் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    இஸ்லாமாபாத் :

    தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

    ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்திய ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களால் இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததும், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களும் பேச்சுவார்த்தைக்கான சூழலை முற்றிலும் முடக்கி இருக்கிறது.

    இந்த சூழலில் சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.
     
    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்ததாலும், பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் அஞ்சல் தலை வெளியிட்டதாலும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரங்களில் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததது.

    இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது துரதிஷ்டவசமானது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

    நேர்மறையான நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்காதது துரதிஷ்டவசமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதியை உருவாக்குவதற்கு  கிடைத்த வாய்ப்பை மேலும் ஒரு முறை இந்தியா வீணடித்துவிட்டது. 

    அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்நாட்டு அழுத்தம் காரணமாக அமைதி பேச்சுவார்த்தையை  இந்தியா ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் துன்புறுத்தி கொன்றதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அது இந்திய அதிகாரிகளின் உள்நோக்கம் கொண்ட தீங்கிழைக்கும் பிரச்சாரமாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    ×