search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Foreign Minister"

    பாலகோட் பகுதியில் நடத்தியதுபோல் இன்னொரு சாகசத்தை நடத்த முயற்சிக்கும் இந்திய அரசு 20-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் மந்திரி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #ShahMahmoodQureshi #Indiaplanningattack #Balakotattack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #PakistanForeignMinister #ShahMahmoodQureshi #Indiaplanningattack  #Balakotattack
    இந்தியாவுடனான எந்த பிரச்சனையையும் போரினால் தீர்த்துவிட முடியாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி  அமெரிக்கா சென்றுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.

    இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக இந்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த ஷா மெஹ்மூத் குரேஷி , அமைதிக்கான வழியில் இந்தியா ஓரடி முன்னெடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டினார்.

    நாங்கள் அமைதிக்கான முதலடியை எடுத்து வைத்தோம். இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இருநாடுகளுமே அணு ஆயுத வலிமைமிக்க நாடுகளாக இருக்கும் நிலையில் பிரச்சனைகளை போரினால் சரிசெய்ய முடியாது.

    போர்முறை என்பது இதில் தீர்வாகாது. பேச்சுவார்த்தை மட்டும்தான் ஒரே தீர்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். #PakistanForeignMinister #warwithIndia #ShahMehmoodQureshi 
    ×