search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunil Gavaskar"

    • கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும்.
    • சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.

    தென் ஆப்பிரிக்கா -இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 200 ரன்களை கடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த கேஎல் ராகுல் 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

    இந்நிலையில் கடினமான பிட்ச்சில் அடித்த இந்த 70 ரன்கள் சதத்திற்கு சமம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேஎல் ராகுல் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சததத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும்.

    முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது. தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது.

    அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8 - 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும்.
    • ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடிக்க முடியும்.

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா ஆகிய இரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் தலைமையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று புதிய சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அதே போல செயல்படாமல் இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடுவதற்கு தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் உங்களுடைய மன நிலையை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வருவதே முதல் சவாலாக இருக்கும். இதுவரை விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 10 ஓவர்களில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அணிக்காக எந்தளவுக்கு ரன்கள் குவிக்க முடியுமோ அந்தளவுக்கு எடுக்க வேண்டும் என முடிவெடுத்து அட்டாக் செய்து அதிரடியாக விளையாடினார்.

    இருப்பினும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் அவர் தம்முடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும். ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடித்து 180 அல்லது 190 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெளியே வர முடியும். அந்த வகையில் அவர் விளையாடினால் இந்தியா எளிதாக ஒரு நாளில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறினார்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள்.
    • இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    மும்பை:

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களின் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது.

    புஜாராவின் சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த பேட்டிங் சராசரியை முன்னேற்ற இந்திய அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள் எனவும் இப்போதைய வீரர்கள் இகோ பார்க்கிறார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் அவர்களை அழைத்து இந்திய அணி நிர்வாகம் பேச வேண்டும். உன்னுடைய பேட்டிங் யுக்தி என்ன ஆனது? அதை முன்னேற்ற நீ என்ன செய்து வருகிறாய் என்று பேச வேண்டும்.

    சிறு சிறு மாற்றங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரேந்திர சேவாக்கை அழைத்து நீ தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகிறாய். இதனால் பேட்டிங் போசிஷனை நீ ஆப் ஸ்டம்புக்கு மாற்று என்று நான் அறிவுரை கூறினேன்.இந்த அறிவுரையை அவர் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த பணியை பயிற்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.


    ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள். பேட்டிங்கில் எனக்கு இந்த குறை இருக்கிறது, அதனை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்வதில் எங்களுக்கும் ஈகோ கிடையாது. வந்து கேட்ட அவர்களுக்கும் ஈகோ கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் வந்து எங்களிடம் பேசுவதில்லை.

    இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நானும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்று அவர்களை குழப்ப விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும்.
    • அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி. கடினமான நாட்களிலும் அவரது அமைதியான ஆளுமையின் காரணமாக 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், அந்த புனைப்பெயருக்கு மற்றொரு போட்டியாளர் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், கபில் தான் அசல் "கேப்டன் கூல்" என்று கூறினார்.

    1983-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த குறைந்த ரன்களை எளிதாக அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 33 (28) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்று பிடித்தது தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திய இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை வெறும் 140 ரன்களுடன் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

    உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் தான் இந்தியாவின் ஒரிஜினல் கேப்டன் கூல் என்று அவரது தலைமையில் விளையாடிய சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.


    இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:-

    அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக ஃபைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்.

    மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்.

    என்று அவர் கூறினார்.

    • அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும்.
    • ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார்.

    டெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வரும் 12-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    இதனிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்குவாட், எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 25 வயதான இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு மீண்டும் இடம் கிடைக்காதது பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்காதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

    ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ் கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.

    அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும். அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும். இந்திய அணியின் தேர்வு முழுக்க முழுக்க ஐ.பி.எல் தொடரை சார்ந்தே இருக்கிறது. அதனால் இனிவரும் காலங்களில் சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள்.
    • அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்ட் அணியில் இருந்து பேட்ஸ்மேன்களில் புஜராவும், பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து புஜரா நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களுக்காக புஜாராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    புஜாரா டெஸ்ட் அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள். மோசமான பேட்டிங்காக புஜராவை மட்டும் பலிகடா ஆக்கியது ஏன்?

    அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் விசுவாசம் உள்ள அமைதியான சேவகர். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடரவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? மற்றவர்கள் அணியில் இருக்கும் போது புஜரா மட்டும் நீக்கப்பட்டது ஏன்?

    தேர்வுக்குழு என்ன அளவுகோல் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    • ரோகித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • டோனியைப் போல் ரோகித் சர்மாவுக்கு கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை.

    மும்பை:

    ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில், வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதும்.

    இந்நிலையில் டோனியை போல் ரோகித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாக ரோகித் சர்மா குறைவாக மதிப்பிடப்படுகிறார். ரோகித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டோனியைப் போல் ரோகித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறுகிறேன்.

    ரோகித் சர்மா லக்னோவுடனான போட்டியில் ஆகாஷ் மத்வாலை பயன்படுத்தியதன் மூலம் பதோனி- பூரான் இருவரும் ஓரே ஓவரில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். ஆனால் ரோகித்தின் இந்த முடிவுக்காக அவர் பரவலாக பாராட்டப்படவில்லை. இதையே டோனி சிஎஸ்கே அணிக்காக செய்திருந்தால் டோனி சிறப்பாக திட்டம் போட்டார் என பலரும் பாராட்டி இருப்பார்கள்.

    என்று அவர் கூறினார்.

    • டோனி இன்னும் சில காலம் விளையாட வேண்டும் என சுனில் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இது டோனியின் கடைசி சீசனாக இருக்க கூடாது என நான் ஆசைப்படுகிறேன்.

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளுக்கும் ஒன்று முதல் இரு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இதுவரை எந்த அணியும் உறுதி செய்யவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டி மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    எந்த சீசனில் நடக்காத வகையில் இந்த சீசனின் சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. சென்னை அணி வெளிமாநில மைதானங்களில் விளையாடினால் சென்னை அணியின் ரசிகர்கள் மைதானங்கள் முழுக்க சூழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல் எதிரணி ரசிகர்களும் டோனியை பார்க்கப்பதற்காகவே மைதானங்களுக்கு வந்தனர்.

    இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் சென்னை அணி கேகேஆர் அணியிடம் தோல்வியடைந்தது. சென்னையில் கடைசி லீக் போட்டி என்பதால் டோனியும், சென்னை அணி வீரர்களும் மைதானம் முழுக்க வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    அப்போது திடீரென வந்த சுனில் கவாஸ்கர், டோனியுடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் போடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து டோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராஃப் போட, இருவரும் கட்டபிடித்து அன்பை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில்:-

    எம்எஸ் டோனியை போன்ற வீரர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தான் வருவார்கள். அதனால்தான் அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். இது டோனியின் கடைசி சீசனாக இருக்க கூடாது என நான் ஆசைப்படுகிறேன். அவர் இன்னும் சில காலம் விளையாட வேண்டும்.

    என அவர் கூறினார்.

    வாழ்நாளில் எத்தனையோ சாதனைகள், எத்தனை வீரர்களை பார்த்துள்ள சுனில் கவாஸ்கர், டோனியை புகழ்ந்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ள சம்பவம் ஐபிஎல் தொடரின் மிகமுக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி சிஎஸ்கே கொடியுடன் வலம் வந்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரில் 61-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே. கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.

    இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இது சென்னையில் நடக்கும் கடைசி லீக் ஆட்டமாகும். அதனால் போட்டி முடிந்தவுடன் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி சிஎஸ்கே கொடியுடன் வலம் வந்தனர்.


    அணியின் கேப்டன் டோனி டென்னிஸ் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக அவர்களை நோக்கி பந்துகளை வீசினார். மேலும் மீண்டும் சந்திப்போம் என்கிற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மைதானம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.

    இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க இந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் மைதானத்தில் வலம் வந்த டோனியிடம் நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கினார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள மும்பை அணிக்கு பவுலிங் தான் சங்கடம் கொடுத்து வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித் 181 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உடல் தகுதியுடன் இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். அவர் இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் விளையாட மீண்டும் வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது தேவையான ஒன்று.

    என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
    • அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

    டெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.

    அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்றும், சிறந்த பார்மில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின்.

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார். 14 ஆட்டத்தில் 10 இன்னிங்சில் ஆடி 183 ரன்கள் எடுத்தார். டெஸ்டில் ஸ்டிரைக்ரேட் 146.40 ஆகும். ஒரு அரை சதம் அடித்துள்ளார். 11 விக்கெட் வீழ்த்தினார்.

    35 வயதான அவர் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன் (அவுட் இல்லை) எடுத்து ராஜஸ்தான் அணி 2-வது இடத்தை பிடிக்க காரணமாக திகழ்ந்தார்.

    இந்த நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். மேலும் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார். 5 சதம் எடுத்துள்ளார். எந்த வரிசையில் எப்படி ஆட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்.

    அஸ்வின்

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு அஸ்வின் தேவையானவர். அவரை தேர்வு செய்ய வேண்டும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதிக்கும் அவர் நீக்கப்படக்கூடியவர் அல்ல.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    ×