search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம் எஸ் டோனி"

    • முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 171 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த டோனிக்கு எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் என்ற ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. அதைப் பார்த்த அவருடைய மனைவி சாக்ஷி, தோல்வியை சந்தித்த சோகம் கொஞ்சமாவது முகத்தில் தெரியுதா பாருங்க என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கலாய்த்துள்ளார்.

    இது பற்றி இன்ஸ்டாகிராமில் சாக்ஷி கூறியதாவது:-

    ஹேய் மஹி. நாம் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என்பதை உணர முடியவில்லை என்று சிரிக்கும் ஸ்மைலியை போட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் வெற்றி பெற்ற ரிஷப் பண்ட்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு, அனைத்துக்கும் முதலாக ரிஷப் பண்ட்டுக்கு வரவேற்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

    • நாளை ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
    • டோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் டோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. ஐபிஎல் அறிமுக போட்டியில் டோனி எந்த ஹர் ஸ்டைலுடன் இருந்தாரோ அந்த ஸ்டைலுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். கருப்பு நிற உடையில் டோனி இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

    இதற்கு பல லட்சம் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் ஹீரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
    • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

    இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

    பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

    டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
    • சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி நேற்று ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவரிலேயே இலங்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சதம் விளாசிய ஷாய் ஹோப் (109) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் டோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது.

    செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்.

    என்று கூறினார்.

    • சூப்பர் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
    • பைக்கை தனது டி-ஷர்ட்டால் துடைத்து, பின்னர் அந்த இடத்தில் டோனி ஆட்டோகிராப் போட்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் டோனி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கபில் தேவுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் டோனி ஆவார்.

    டோனி ஓய்வை அறிவித்த பிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருவதுண்டு. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் சரி உடனே அந்த வீடியோ வைரலாகி விடும். அதுபோல சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் டோனி வீட்டிற்கு சென்று அங்குள்ள பைக்குகளை பார்த்து வீடியோ வெளியிட்டார் உடனே இந்த வீடியோவும் வைரலாகியது. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

    இந்த வரிசையில் தற்போது சூப்பர் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சொந்த ஊரான ராஞ்சியில் ரசிகரின் பைக்குக்கு டோனி ஆட்டோகிராப் போடுகிறார். அப்போது பைக்கில் தூசி இருந்ததால் அதனை தனது டி சர்ட்டால் துடைத்து, பின்னர் அந்த இடத்தில் அவர் ஆட்டோகிராப் போட்டார்.

    பின்னர் பைக் மீது உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து எப்படி இருக்கிறது என்பதை சோதித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம்.
    • இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறிவரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி யார்? என்பது குறித்து முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை கூறிள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணி வீரர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களை சந்தித்து பேசுகிறேன். அப்படி பேசும் போது தற்போதுள்ள இந்திய அணியில் வீரர்கள் அனைவருமே டோனிக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கிறார்களோ அதே போன்று ரோகித்துக்கும் மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

    ஏனெனில் ரோகித் எப்பொழுதுமே ஓய்வறையில் வீரர்களுடன் மிகவும் நட்பாக இருக்கிறாராம். அதோடு சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஓய்வறையில் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவரது தலைமை பண்புகளை நான் டோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். அந்த வகையில் என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் டோனி ரோகித்தான்.

    ஏனெனில் ரோகித் அமைதியானவர், அதோடு யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கக் கூடியவர். அதுமட்டுமின்றி வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். இதெல்லாம் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஒரு கேப்டனாக அவர் ஓய்வறையில் வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த டோனி என்பதை நினைக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். 39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் (39.5 ஓவர்) திரட்டி பிரிந்தனர். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்னில் கேட்ச் ஆனார். ரமனுல்லா குர்பாஸ் 151 ரன்கள் (151 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர் டோனி 148 ரன் (2005-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    • இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது.
    • டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

    இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மூலம் ரிங்கு சிங் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.

    ஐபிஎல் தொடர் மூலம் ரிங்கு சிங் இந்திய அணிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பினிஷிங் ரோல் செய்தார். ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 5 பந்துகளை சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாக காணப்பட்டார்.

    இந்நிலையில் டோனி மற்றும் யுவராஜ் இடத்தை ரிங்கு சிங் பூர்த்தி செய்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அவர் 5 அல்லது 6-வது இடத்தில் சிறப்பாக செயல்படுவார். ஒரு சிறந்த ஃபினிஷராகவும் அவரால் இருக்க முடியும். டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

    நாங்கள் அத்தகைய வீரர்களை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அது இதுவரை வேலை செய்யவில்லை. ரிங்கு ஒரு சிறந்த பீல்டரும் கூட. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நிறைய மேம்பட்டு இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்.

    ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டராக மாறி, 3 அல்லது 4-வது வரிசையில் விளையாடுவதால், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. உங்களிடம் அக்சர் படேல் போன்ற ஒருவர் இருக்கிறார், ஆனால் ரிங்கு சிங்தான் அந்த இடத்துக்கு பொறுத்தமானவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும்.
    • ஆனால் அதனை டோனி 2021-இல் தான் வாங்கினார்.

    மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் அவரது வீட்டில் உள்ள பெரிய கேரேஜில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் விண்டேஜ் பைக்குகள் உயர் ரக கார்கள் மற்றும் பல பழங்கால விண்டேஜ் கார்களும் உள்ளன. அதில் அவரது பிரியமான கார்களில் ஒன்று பழைய ரோல்ஸ் ராய்ஸ் சிவர் ரெய்த் 2 ஆகும்.

    அதை அவர் சமீபத்தில் அவரது சொந்த ஊரான ராஞ்சியின் சாலையில் ஓட்டியதை கண்ட ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும். ஆனால் அதனை டோனி 2021-இல் தான் வாங்கினார்.

    சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் டோனியின் பண்ணை வீட்டில் உள்ள கார்களின் பிரமாண்ட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்து கொண்டனர். அதில் டோனியின் அனைத்து பைக்குகள் மற்றும் கார்களும் இடம்பெற்றுள்ளன.

    • ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும்.
    • அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி. கடினமான நாட்களிலும் அவரது அமைதியான ஆளுமையின் காரணமாக 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், அந்த புனைப்பெயருக்கு மற்றொரு போட்டியாளர் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், கபில் தான் அசல் "கேப்டன் கூல்" என்று கூறினார்.

    1983-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த குறைந்த ரன்களை எளிதாக அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 33 (28) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்று பிடித்தது தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திய இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை வெறும் 140 ரன்களுடன் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

    உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் தான் இந்தியாவின் ஒரிஜினல் கேப்டன் கூல் என்று அவரது தலைமையில் விளையாடிய சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.


    இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:-

    அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக ஃபைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்.

    மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்.

    என்று அவர் கூறினார்.

    ×