search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெஸ்ட்டில் அணுகுமுறையை மாற்ற வேண்டும்- ரோகித்துக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்
    X

    டெஸ்ட்டில் அணுகுமுறையை மாற்ற வேண்டும்- ரோகித்துக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்

    • இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும்.
    • ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடிக்க முடியும்.

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா ஆகிய இரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் தலைமையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று புதிய சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அதே போல செயல்படாமல் இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடுவதற்கு தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் உங்களுடைய மன நிலையை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வருவதே முதல் சவாலாக இருக்கும். இதுவரை விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 10 ஓவர்களில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அணிக்காக எந்தளவுக்கு ரன்கள் குவிக்க முடியுமோ அந்தளவுக்கு எடுக்க வேண்டும் என முடிவெடுத்து அட்டாக் செய்து அதிரடியாக விளையாடினார்.

    இருப்பினும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் அவர் தம்முடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும். ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடித்து 180 அல்லது 190 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெளியே வர முடியும். அந்த வகையில் அவர் விளையாடினால் இந்தியா எளிதாக ஒரு நாளில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறினார்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    Next Story
    ×