search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide"

    • காட்டில் பிணமாக கிடந்தார்
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே உள்ள எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 33). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயபிரியா (30). இவர் செட்டிப்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி என்பவர் கடன் பிரச்சினை காரணமாக தலைமறைவாக உள்ளார். அண்ணனை பார்க்காமல் ராஜசேகர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று ராஜசேகர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அந்த பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதையில் இருந்த அவர் சமத்துவபுரம் அருகே உள்ள காட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் சம்பவஇடத்திலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.

    காட்டில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது தி.மு.க. கவுன்சிலரின் கணவர் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் பூங்காவனம் (வயது 41). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 8-ம் வகுப்பு பயிலும் ரம்யா என்ற பெண் குழந்தையும், 3-ம் வகுப்பு பயிலும் கோகுலகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் திண்டிவனம் கலால் துறையில் 5 வருடமும், செஞ்சி ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு வருடமும் துணை தாசில்தாராக பணி செய்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக செஞ்சி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டார். செஞ்சி அருகே காரையில் குடியிருக்கும் பூங்காவனம் அங்கிருந்து தினமும் மேல்மலையனூருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்றவ ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள், பூங்கா வனம ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துணை தாசில்தார் பூங்காவனம் மயங்கி விழுந்த கிடந்த இடத்திற்கு அருகே வயல்வெளிக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து பாட்டீல் இருந்ததை கண்டறிந்தனர்.மேலும், அவர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுட ன்தான் உறுதியாக கூறமுடியு மென டாக்டர்கள் தெரிவித்தனர். துணை தாசில்தார் பூங்காவனம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டா ரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி பெருமாள் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த வருடம் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    மேலும் அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த மோகன்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி வடக்குஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்துள்ளார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அடுத்த மேலகபிஸ்தலம் கொத்ததெரு பாலக்கரை பகுதியில் வசிப்பவர் அப்பாசாமி (வயது 64).

    விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சரோஜா (55).

    சம்பத்தன்று அப்பாசாமிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்து மயங்கிவிட்டார்.

    இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் போரின் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வியாபாரி ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பொம்மைய கவுண்ட ன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    பாலமுருகன் ஜவுளிவி யாபாரம் செய்து வந்தார். மது போதைக்கு அடிமை யானதால் வயிற்றில் நீர்கட்டி ஏற்பட்டது. ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தார்.

    இதனால் அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • தீராத குடிப்பழக்கம் உயிரை பறித்தது
    • சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை எஸ்.பி.வடுகபாளையம், பொங்கலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 54). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு குடிப்பழக்கம் காரணமாக தீராத வயிற்றுவலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.

    எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது கத்தியால் தனக்குதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக சுல்தான்பேட் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கடலூர் அடுத்த எஸ்.புதூரை சேர்ந்தவர் அருள் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து அருளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அருள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்: கடலூர் அடுத்த சின்ன குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டு படியில் திடீரென்று வழுக்கி விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மாரியப்பன் வலி தாங்க முடியாத நிலையில் வீட்டில் தூக்கு போட்டு மயக்க நிலையில் இருந்தார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த டாக்டர் மாரியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிறந்த நாளுக்கு காதலன் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் மனவேதனை
    • மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார்

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கே.ஆர். நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் பரணி என்ற சபரி (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 1 அரை ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று சந்துருவுக்கு பிறந்த நாள். எனவே தன்னை கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு அவரிடம் பரணி கூறி இருந்தார். அப்போது அவர் மாணவியிடம் நீ செமஸ்டர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்கி விட்டு வா அதன் பின்னர் பார்த்து கொள்ளலாம் என கூறினார்.

    அப் போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பரணி தற்கொலை ெய்வது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவி பரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.
    • படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபிரபு (வயது 33). வேதியியல் முதுகலை பட்டதாரி. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசி ரியராக வேலைபார்த்து வந்தார். இதற்காக சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

    தனபிரபு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வந்தார். பின்னர் அவர் திடீரென பணியில் இருந்து விலகினார். தொடர்ந்து வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு சிறப்பு வேதியியல் வகுப்புகள் நடத்தினார். இதற்காக அவர் வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.

    இந்நிலையில் தனபிரபு சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே அவர் தற்கொலை செய்வது என முடிவெடுத்தார்.

    பின்னர் நைட்ரஜன் வாயு சிலிண்டரை திறந்து விட்டு, அதில் இருந்து வெளிப்பட்ட விஷவாயுவை வலுக்கட்டாயமாக முகர்ந்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அடுத்தநாள் காலையில் பேராசிரியர் தனபிரபு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

    மேலும் வீட்டில் இருந்து விஷவாயுவின் வாசனை வெளிப்பட்டவண்ணம் இருந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பேராசிரியர் தனபிரபு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர். தனபிரபு எழுதிய அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பேராசிரியர் தனபிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை. வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருந்தார். மேலும் அவர் ஷேர் மார்க்கெட்டில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து வந்து உள்ளார். இதில் அவருக்கு ஏதேனும் பெரியஅளவில் நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு கண்மாய் கரை ஏ.கே.கோபாலன் 2-வது தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்பாண்டி. இவரது மகள் இலக்கியா (வயது22). மதுரையில் உள்ள கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த

    இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் பாண்டி கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இலக்கியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வில்லாபுரம் பழனிமுத்து நகர் மணிகண்டன் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சரவணவிக்னேஷ்(37). பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்க ளாக அதிக பணிச்சுமை இருப்பதாக சரவண விக்னேஷ் குடும்பத்தி னரிடம் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது அறையில் சரவண விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சித்திரக்காள்(80). சம்பவத்தன்று விரக்தியில் இருந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பசுமலை ஜோன்ஸ்புரம் முதல் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(வயது42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் குழந்தை களுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த தண்ட பாணி ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்ததாக தெரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் வெறுப்ப டைந்த நிலையில் சம்பவத் தன்று தண்டபாணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தண்ட பாணி இறந்தார். திருப்ப ரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனியில் வெவ்வெறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்த கார்த்திக் தேனியில் உள்ள ஓட்டலில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனக்கு யாரும் இல்லை என கூறி புலம்பி யுள்ளார்.

    சிறிது நேரத்தில் ஓட்டல் மாடியில் அவர் தங்கி இருந்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்க ளுக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கண்டமனூர் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 50). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (55). கடந்த 3 வருடங்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20).
    • நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குணமாகவில்லை.

    இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். இசக்கிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மன வேதனையில் இருந்த இசக்கிமுத்து வீட்டின் கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×