search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே கழிவறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
    X

    நெல்லை அருகே கழிவறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    • சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20).
    • நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பானை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 20). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் குணமாகவில்லை.

    இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்நிலையில் நேற்று மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். இசக்கிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மன வேதனையில் இருந்த இசக்கிமுத்து வீட்டின் கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×