search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நைட்ரஜன் வாயு"

    • வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.
    • படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபிரபு (வயது 33). வேதியியல் முதுகலை பட்டதாரி. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசி ரியராக வேலைபார்த்து வந்தார். இதற்காக சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

    தனபிரபு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வந்தார். பின்னர் அவர் திடீரென பணியில் இருந்து விலகினார். தொடர்ந்து வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு சிறப்பு வேதியியல் வகுப்புகள் நடத்தினார். இதற்காக அவர் வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.

    இந்நிலையில் தனபிரபு சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே அவர் தற்கொலை செய்வது என முடிவெடுத்தார்.

    பின்னர் நைட்ரஜன் வாயு சிலிண்டரை திறந்து விட்டு, அதில் இருந்து வெளிப்பட்ட விஷவாயுவை வலுக்கட்டாயமாக முகர்ந்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அடுத்தநாள் காலையில் பேராசிரியர் தனபிரபு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

    மேலும் வீட்டில் இருந்து விஷவாயுவின் வாசனை வெளிப்பட்டவண்ணம் இருந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பேராசிரியர் தனபிரபு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர். தனபிரபு எழுதிய அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பேராசிரியர் தனபிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை. வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருந்தார். மேலும் அவர் ஷேர் மார்க்கெட்டில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து வந்து உள்ளார். இதில் அவருக்கு ஏதேனும் பெரியஅளவில் நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×