என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
    X

    காரமடை அருகே கல்லூரி மாணவி தற்கொலை

    • பிறந்த நாளுக்கு காதலன் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் மனவேதனை
    • மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார்

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கே.ஆர். நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் பரணி என்ற சபரி (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., 2-வது ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 1 அரை ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று சந்துருவுக்கு பிறந்த நாள். எனவே தன்னை கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு அவரிடம் பரணி கூறி இருந்தார். அப்போது அவர் மாணவியிடம் நீ செமஸ்டர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்கி விட்டு வா அதன் பின்னர் பார்த்து கொள்ளலாம் என கூறினார்.

    அப் போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பரணி தற்கொலை ெய்வது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவி பரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×