என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்21 Nov 2023 5:43 AM GMT
- குடும்ப பிரச்சினையில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி பெருமாள் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த வருடம் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
மேலும் அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த மோகன்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி வடக்குஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X