search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூரில் விஷம் குடித்து துணை தாசில்தார் தற்கொலை வளத்தி போலீசார் விசாரணை
    X

    பூங்காவனம்

    மேல்மலையனூரில் விஷம் குடித்து துணை தாசில்தார் தற்கொலை வளத்தி போலீசார் விசாரணை

    மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் பூங்காவனம் (வயது 41). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 8-ம் வகுப்பு பயிலும் ரம்யா என்ற பெண் குழந்தையும், 3-ம் வகுப்பு பயிலும் கோகுலகிருஷ்ணன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் திண்டிவனம் கலால் துறையில் 5 வருடமும், செஞ்சி ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு வருடமும் துணை தாசில்தாராக பணி செய்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக செஞ்சி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டார். செஞ்சி அருகே காரையில் குடியிருக்கும் பூங்காவனம் அங்கிருந்து தினமும் மேல்மலையனூருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மேல்மலையனூர் வளத்தி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் துணை தாசில்தார் பூங்காவானம் நேற்று காலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்றவ ர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள், பூங்கா வனம ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துணை தாசில்தார் பூங்காவனம் மயங்கி விழுந்த கிடந்த இடத்திற்கு அருகே வயல்வெளிக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து பாட்டீல் இருந்ததை கண்டறிந்தனர்.மேலும், அவர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுட ன்தான் உறுதியாக கூறமுடியு மென டாக்டர்கள் தெரிவித்தனர். துணை தாசில்தார் பூங்காவனம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டா ரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×