என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்20 Nov 2023 9:32 AM GMT
- வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அடுத்த மேலகபிஸ்தலம் கொத்ததெரு பாலக்கரை பகுதியில் வசிப்பவர் அப்பாசாமி (வயது 64).
விவசாய கூலி தொழிலாளி.
இவரது மனைவி சரோஜா (55).
சம்பத்தன்று அப்பாசாமிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்துடன் மதுவை கலந்து குடித்து மயங்கிவிட்டார்.
இதனை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின் போரின் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X