என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை
    X

    கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை

    • கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு கண்மாய் கரை ஏ.கே.கோபாலன் 2-வது தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்பாண்டி. இவரது மகள் இலக்கியா (வயது22). மதுரையில் உள்ள கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த

    இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் பாண்டி கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இலக்கியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வில்லாபுரம் பழனிமுத்து நகர் மணிகண்டன் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சரவணவிக்னேஷ்(37). பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்க ளாக அதிக பணிச்சுமை இருப்பதாக சரவண விக்னேஷ் குடும்பத்தி னரிடம் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனது அறையில் சரவண விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சித்திரக்காள்(80). சம்பவத்தன்று விரக்தியில் இருந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பசுமலை ஜோன்ஸ்புரம் முதல் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(வயது42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் குழந்தை களுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த தண்ட பாணி ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்ததாக தெரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் வெறுப்ப டைந்த நிலையில் சம்பவத் தன்று தண்டபாணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தண்ட பாணி இறந்தார். திருப்ப ரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×