என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கூலித்தொழிலாளி கழுத்தறுத்து தற்கொலை
- தீராத குடிப்பழக்கம் உயிரை பறித்தது
- சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை
கோவை,
கோவை எஸ்.பி.வடுகபாளையம், பொங்கலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 54). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் காரணமாக தீராத வயிற்றுவலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.
எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது கத்தியால் தனக்குதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக சுல்தான்பேட் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






