search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை
    X

    கோவை அருகே தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை

    • காட்டில் பிணமாக கிடந்தார்
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே உள்ள எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 33). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயபிரியா (30). இவர் செட்டிப்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி என்பவர் கடன் பிரச்சினை காரணமாக தலைமறைவாக உள்ளார். அண்ணனை பார்க்காமல் ராஜசேகர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று ராஜசேகர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அந்த பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதையில் இருந்த அவர் சமத்துவபுரம் அருகே உள்ள காட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் சம்பவஇடத்திலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.

    காட்டில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது தி.மு.க. கவுன்சிலரின் கணவர் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×