search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "state government"

    தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #MaduraiHighCourt
    மதுரை:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும், பறவைகளும் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம். 2020-ம் ஆண்டு தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பஞ்சத்தை போக்கவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போர்க்கால அடிப்படையில் தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், “மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நம் நாட்டில் மக்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் பருவமழை பொய்த்ததால், 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    2025-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன யுத்திகளை மத்திய, மாநில அரசுகள் கையாள வேண்டும். செயற்கை மழைக்காக பல்வேறு நாடுகள் ஏராளமான நிதி செலவு செய்கின்றன. 1980-ம் ஆண்டில் தமிழகத்தில் செயற்கை மழை வரவழைக்க முயற்சி செய்யப்பட்டது“ என்றனர்.

    பின்னர் செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏன் முயற்சி செய்யக்கூடாது. குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலோர மாவட்டங்களில் உப்பு நீர் பாசனத்தை ஏன் ஏற்படுத்தவில்லை என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    பின்னர் விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHighCourt
    ஓட்டுக்காகவே மத்திய-மாநில அரசுகள் உதவித்தொகை வழங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin #DMK
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும், நிலக்கோட்டை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் ஏறக்குறைய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்று ஊராட்சி சபை கூட்டங்களை நாம் நடத்தி வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி இந்த பயணத்தை தொடங்கினோம். இப்போது ஏறக்குறைய 90 முதல் 95 சதவீதம் ஊராட்சி சபை கூட்டத்தை முடித்திருக்கின்றோம். வருகின்ற 17-ந் தேதிக்குள் (நாளை) முழுமையாக முடிக்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டு அந்த பணியை செய்து கொண்டிருக்கின்றோம்.

    மத்தியில் மோடி தலைமையில் ஒரு பாசிச ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. அதுபோல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி ஒரு கொடுமையான நிலையில் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு திடீர், திடீரென்று மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியும், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியும் சில அறிவிப்புகளை செய்கின்றார்கள்.

    நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்ற காரணத்தால் தங்களுடைய ஆட்சி முடியப்போகிற சூழலால் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். இதுவரைக்கும், சொன்ன எந்த வாக்குறுதியையும் இவர்கள் யாருக்கும் செய்ததில்லை. இப்போது திடீரென்று விவசாயிகளுக்காக ரூ.6 ஆயிரம் நிதி கொடுக்கப்போகின்றோம் என்கிறார்கள். முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகின்றோம் என்று ஒரு அறிவிப்பை மோடி வெளியிட்டிருக்கின்றார்.

    உடனே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடியும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு நாங்கள் ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகின்றோம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இது ஓட்டுக்காக கொடுக்கக்கூடிய பணம் என்பதை நாட்டு மக்கள் இன்றைக்கு நன்றாக தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது எடுத்த படம்

    இப்போது இருக்கக்கூடிய ஆட்சியை பொறுத்தவரைக்கும், இருக்கக்கூடிய பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால், கொள்ளையடிக்க முடியாது, பதவி போய்விட்டால் அமைச்சராக இருக்க முடியாது. பதவி போய்விட்டால் ஊழல் பண்ண முடியாது. எனவே, அந்த பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய நிலை தான்.

    இப்போது பார்த்தீர்கள் என்றால், ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு இது ஒரு மெஜாரிட்டி ஆட்சிகூட இல்லை. இது ஒரு மைனாரிட்டி ஆட்சி. அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. எனவே மக்களைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ஆட்சியை காப்பாற்றினால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்படி மக்களைப் பற்றி கவலைப்படுவார்கள். நிச்சயமாக கவலைப்பட மாட்டார்கள்.

    உள்ளாட்சி தேர்தலை, இதுவரைக்கும் இந்த ஆட்சி நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை என்றால், அப்படி நடத்தினால் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஜெயிக்க முடியாது. தி.மு.க. காரர்கள் ஜெயித்து வந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் இதுவரை தேர்தலை தள்ளிப்போட்டு வந்துவிட்டார்கள்.

    எனவே, இப்போது ஒரு உறுதியை நான் உங்களிடத்தில் சொல்லப்போகின்றேன். தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகின்றது என்ற அந்த நம்பிக்கையில் தான் நீங்கள் எல்லோரும் வந்திருக்கின்றீர்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தப்போகின்றோம்.

    நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றதோ இல்லையோ, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வராதா என்ற ஏக்கம் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கின்றது. எது எப்படி இருந்தாலும், அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு வழங்குகின்ற நேரத்தில் தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டம் தொடங்கிய உடன் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். #MKStalin #DMK
    மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Jayalalithaamemorial
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை, உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை ஆகும்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது. அதாவது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறது.

    இந்த நினைவிடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச் சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை கேட்டு மார்ச் 14-ந் தேதி தான் தமிழ் வளர்ச்சித்துறை மனு கொடுத்துள்ளது. அந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல், இரண்டே நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும் ஒப்புதல் பெறவில்லை. அனைத்து விதிகளையும் மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான பகுதியில் கட்டுமானம் (நினைவிடம்) கட்டினால் மட்டுமே மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் தான் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெறத்தேவையில்லை’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வி.இளங்கோ வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #Jayalalithaamemorial
    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். #greenwayroad #vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது. இதனால் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகள், விளை நிலங்கள், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், லட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

    ம.தி.மு.க. எந்த வளர்ச்சித்திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் எங்கள் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று எடப்பாடி பழனிசாமி மார்தட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.



    எனவே பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மனுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #greenwayroad #vaiko
    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #TeacherStruggle #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அடுத்தக்கட்டமாக நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

    அரசு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினால், அவர்களை அழைத்து பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்றுவதும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளாக இருந்தால் அவை குறித்து அரசு ஊழியர் சங்கத்தினரிடம் விளக்கி சமரசம் செய்வது தான் வழக்கமாகும்.

    ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு பதிலாக அவர்கள் மீது அடக்கு முறையை கட்ட விழ்த்து விடும் அணுகு முறையை கடைபிடித்து வருகிறது.

     


    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து பரிந்துரைப் பதற்கான குழுவை கலைப்பதுடன், அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாய மானவையாகும்.

    ஆனால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. மாறாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார்.

    எனினும், ஐந்தாண்டு ஆட்சியில் அத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 6 மாதங்களில் அக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 30 மாதங்களாகியும் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

    அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேசியிருக்க வேண்டும். ஆனால், சர்வாதிகார மனப்போக்குடன் தமிழக அரசு நடந்து கொள்வதால் தான் அதைக் கண்டித்து, நாளை மறுநாள் முதல் சென்னையில் சங்க நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாநிலையும், மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TeacherStruggle #AnbumaniRamadoss

    ஓமனில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவித்தது.
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமம், புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி சேவியர். இவருக்கு சொந்தமான ‘கவின் பிறைட்’ என்ற மீன்பிடி விசைப்படகில் அவருடன் சேர்த்து 10 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது இயற்கை சீற்றத்தினால் விசைப்படகு இழுத்து செல்லப்பட்டு, ஓமன் கடல்பகுதிக்கு சென்றது. இதையடுத்து விசைப்படகையும், அதில் இருந்த 10 தமிழக மீனவர்களையும் ஓமன் கடற்படையினர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி சிறைப்பிடித்தனர். கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் இயற்கை சீற்றத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டோம் என்று விளக்கமாக எடுத்துச்சொல்லியும் அவர்களை விடவில்லை.

    இந்த நிலையில் மீனவர்கள் குடும்பத்தினரிடன் வேண்டுகோளுக்கிணங்க, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    அதன் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஓமனில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கிறது. #tamilnews
    பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதும், சிறந்த டாக்டர்களை உருவாக்குவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் யோகேஷ் உள்ளிட்ட 16 டாக்டர்கள் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களில் எங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எங்களது பெயர் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெறாததால், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய முடியவில்லை.

    எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், மாநில ஒதுக்கீட்டின் கீழ் எங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ‘சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்ற போதும் ஏதாவது ஒரு கலந்தாய்வில் மட்டுமே அவர்கள் பங்கேற்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் உரிமை கோர முடியாது’ என்று கூறியது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர்கள் அனைவரும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி, இந்த கலந்தாய்வுகள் நடக்கின்றன. மனுதாரர்கள் ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் என்ற காரணத்தால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இளம் டாக்டர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்காவிட்டால் அவர்களால் நாட்டுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியாது.

    எனவே நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லூரிகளை, டாக்டர்கள் விரும்பும் துறைகளுடன் தொடங்க வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க சிறந்த டாக்டர்களை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.#WorldNursingDay
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்தில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் 12-5-1820-ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12-ம் நாளே உலக செவிலியர் தினமாகும்.

    செவிலியர் தினத்தின் முக்கியத்துவத்தை அறியாத தமிழக முதல்-அமைச்சர், கடந்த 10-ந் தேதியே செவிலியர் தினத்துக்கு வாழ்த்துக் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, செவிலியர் தினத்தன்று உரிய முறையில் கவுரவிப்பது தான் அவர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

    பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய - மாநில அரசுகள் மே 12-ம் நாளில் அவர்களது பணிப் பாதுகாப்பை உறுதிசெய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.



    புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் உரித்தாக்குகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #WorldNursingDay
    ×