என் மலர்
நீங்கள் தேடியது "Jayalalithaa Memorial"
- புதுச்சேரி மாநிலத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க உள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5-ந் தேதி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அவரவர் பகுதிகளில் அன்னதானம் வழங்குகிறார்கள்.
- அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
- எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவி அம்மாவை போற்றி வணங்கும் வகையில், அவரது நினைவு நாளான வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த சாதகமான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?
பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.
கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?

கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.
கேள்வி:- இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.
கேள்வி:- வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?
பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...
கேள்வி:- எப்போது வேதா நிலையம் செல்ல இருக்கிறீர்கள்?
பதில்:- நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக் கூடாது. அதுவும் கடலோர ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராகவும் நினைவிடம் கட்டப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மனுதாரர் சார்பில் வக்கீல் சிவஞானசம்பந்தம் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு தனிக் கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக மாநில ஐகோர்ட்டு, அந்த தண்டனையை ரத்து செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு அளிப்பதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது கடைசி மூச்சு இருக்கும் வரை, கர்நாடகா மாநில ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புதான் அமலில் இருந்துள்ளது. அதனால் ஜெயலலிதா சாகும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி இல்லை. அவரை குற்றவாளி என்று கூற முடியாது.
அதேநேரம், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கொள்கை முடிவு என்பது மக்களின் நலனுக்காக எடுக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பொழுது போக்கு இடமாக கட்டாமல், பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். மக்களிடம் வரியாக பெற்ற பணத்தை கொண்டு மறைந்த முதல்- அமைச்சர்கள், தலைவர்களுக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. மக்கள் வரிப்பணம் எல்லாம் வீணாகுகிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இதுபோன்ற தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என்று மக்களுக்கு நன்மை தருவதை கட்டி, அதற்கு அந்த தலைவர்களின் பெயர்களை சூட்டினால், ஆண்டாண்டு காலத்துக்கு அந்த தலைவர்களின் பெயர் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும். அதேநேரம், இதையெல்லாம் அரசு தான் செய்யவேண்டும்.
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நினைவிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர். #MadrasHC #Jayalalithaa
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.
எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு. #KadamburRaju #KarunanidhiMemorial
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெரினா கடற்கரை, உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை ஆகும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது. அதாவது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறது.
இந்த நினைவிடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச் சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை கேட்டு மார்ச் 14-ந் தேதி தான் தமிழ் வளர்ச்சித்துறை மனு கொடுத்துள்ளது. அந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல், இரண்டே நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும் ஒப்புதல் பெறவில்லை. அனைத்து விதிகளையும் மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான பகுதியில் கட்டுமானம் (நினைவிடம்) கட்டினால் மட்டுமே மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் தான் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெறத்தேவையில்லை’ என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வி.இளங்கோ வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #Jayalalithaamemorial
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடக்கிறது.
கடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். அதை தொடர்ந்து நினைவிடம் கட்டுமான பணிகள் தொடங்கின.
தற்போது ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மண்டபத்துக்கான தூண்கள் அமைப்பதற்காக புல்டோசர் மற்றும் எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடக்கிறது. 10-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கான்கிரீட் பீம்கள், சுவர்கள், தரைதளம் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையொட்டி சமாதி அருகே தடுப்பு வேலிகள், கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள். #MerinaBeach #Jayalalithaa






