search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assetes case"

    சென்னை மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #Jayalalithaa
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக் கூடாது. அதுவும் கடலோர ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராகவும் நினைவிடம் கட்டப்படுகிறது என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மனுதாரர் சார்பில் வக்கீல் சிவஞானசம்பந்தம் ஆஜராகி வாதிட்டனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கடந்த டிசம்பர் 19-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் இன்று பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-



    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு தனிக் கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக மாநில ஐகோர்ட்டு, அந்த தண்டனையை ரத்து செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு அளிப்பதற்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது கடைசி மூச்சு இருக்கும் வரை, கர்நாடகா மாநில ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புதான் அமலில் இருந்துள்ளது. அதனால் ஜெயலலிதா சாகும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி இல்லை. அவரை குற்றவாளி என்று கூற முடியாது.

    அதேநேரம், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கொள்கை முடிவு என்பது மக்களின் நலனுக்காக எடுக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

    மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பொழுது போக்கு இடமாக கட்டாமல், பள்ளி மாணவர்கள் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். மக்களிடம் வரியாக பெற்ற பணத்தை கொண்டு மறைந்த முதல்- அமைச்சர்கள், தலைவர்களுக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. மக்கள் வரிப்பணம் எல்லாம் வீணாகுகிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், இதுபோன்ற தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என்று மக்களுக்கு நன்மை தருவதை கட்டி, அதற்கு அந்த தலைவர்களின் பெயர்களை சூட்டினால், ஆண்டாண்டு காலத்துக்கு அந்த தலைவர்களின் பெயர் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும். அதேநேரம், இதையெல்லாம் அரசு தான் செய்யவேண்டும்.

    ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நினைவிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரவில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர். #MadrasHC #Jayalalithaa
    தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa #JayaProperty #Sasikala
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இதனால் அவரிடம் இருந்து அபராதம் வசூலிக்கத் தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    ஜெயலலிதா, சசிகலா உள்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் 155 சொத்துக்களை அரசு கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அவர்களது 155 சொத்துக்களை கைப்பற்றுமாறு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவுப்படி இந்த சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடருமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் கடிதம் எழுதியது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியது.

    சொத்துக்களை அடையாளம் கண்ட பிறகு வருவாய் அதிகாரிகள் அந்தந்த இடங்களில் இது தமிழக அரசுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகைகள் வைப்பார்கள். இந்த சொத்துக்கள் தொடர்பாக எந்தவித பரிமாற்றத்தையும் அனுமதிக்க கூடாது என்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் கோர்ட்டு சொத்து மதிப்பு ரூ.53.60 கோடி என்று நிர்ணயித்து அதன் அடிப்படையில் தீர்ப்பளித்தது. தற்போது இதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.



    தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் இந்த சொத்துக்களை கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கையகப்படுத்தும் சொத்துக்களில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகியவை குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி அவரது பூர்வீக சொத்து என்பதால் அது அவரது வாரிசுகளுக்கு சொந்தமாகும் என்று கூறப்படுகிறது. #Jayalalithaa #JayaProperty #Sasikala
    ×