search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers struggle"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • பலர் வாழ்த்துரை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி குடும்பத்துடன் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர், திருப்பதி, மாவட்ட தலைவர் சரவணன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

    ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் செயலாளர் பிரேம் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிராம சுகாதார செவிலியர் மற்றும் மேற்பார்வையாளர் சங்க தனலட்சுமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
    • 500 உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திருப்பத்தூரில் 10 வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையமான மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் வட்ட தலைவர் கே‌ அண்ணாமலை, தலைமை வகித்தார் அனைவரையும் ஆம்பூர் வட்டத் தலைவர் எஸ்.அறிவழகன் வரவேற்றார், கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார், தொடங்கிவைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 2004-2006, வரை பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமன நாளிலிருந்து பணிவரன்முறை செய்ய வேண்டும், 2022 முதல் வழங்கப்பட வேண்டிய அனைத்து அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எம். தேசிங்கு ராஜன்‌, மாவட்டச் செயலாளர் வி. மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஆர். துக்கன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் எம். சுரேஷ், மாவட்ட இணைச்செயலாளர் மோதிலால், சுப்பிரமணி, உட்பட 500 உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் இறுதியில் வட்டத் தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போராட்டம் நடைபெறவில்லை.

    நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் முக்கிய நிர்வாகிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    ஆசிரியர்கள் வராத பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிகமாக புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன் கருதி உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்- ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை அரசு அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.


    அதன் பிறகு தமிழக அரசு சார்பில் மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

    அதில், “அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

    காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-ம் நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இதனால் திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பெரும்பாலான சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை என்று திரும்பி சென்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன், பாஸ்கர், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் மற்றும் மறியல் 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் விக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு வருவாய்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வருவாய்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினரும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (25-ந் தேதி) மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    சம வேலை, சம ஊதியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #TeachersProtest

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நிலவுவதை கண்டித்து சென்னையில் காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2009-ம் ஆண்டுக்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு குறைவான சம்பளமும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான சம்பளமும் வழங்கப்படுகிறது.

    இந்த ஊதிய முரண்பாடை களைய வேண்டும் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ‘‘சமவேலைக்கு சம ஊதியம்’’ என்ற கோ‌ஷத்தை முன் வைத்து போராடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த 4000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக கடந்த 24-ந்தேதி ஆசிரியர்- ஆசிரியைகள் குவிந்து இருந்தனர்.

    அவர்கள் சட்ட விரோதமாக கூடியதாக கூறி போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இங்கு சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்டேடியத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அங்கு தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

     


    சிலர் குழந்தைகளுடனும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெட்ட வெளியில் மரத்தடியிலும் ஆங்காங்கேயும் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இரவில் கொட்டும் பனியிலும், விடிய விடிய போராட்டம் நீடிக்கிறது.

    உண்ணாவிரதம் இருப்பதால் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு களைப்படைந்து மயக்கம் ஏற்படுகிறது. அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்து வருகிறார்கள். இரவு வரை மொத்தம் 210 ஆசிரியர்- ஆசிரியைகள் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 210 பேரில் 111 பேர் ஆசிரியை ஆவார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் தினகரன், தே.மு.தி.க. சார்பில் விஜய பிரபாகரன் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் துரைபாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே அரசு பேச்சு நடத்தி கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயார் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோர் எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும். கோரிக்கையை ஏற்பதாக உறுதி அளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

    இங்கே மரங்கள், செடி- கொடிகளுக்கு இடையே போராட்டம் நடத்துகிறோம். இரவில் பூச்சிகளுக்கு அஞ்சாமலும், கடும் பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெறுகிறது.

    உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TeachersProtest

    சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்த பின்னரும் போலீசார் வாங்கி கொடுத்த உணவை சாப்பிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் 1,800 இடைநிலை ஆசிரியர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

    இதனால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.

    ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கை விடவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

    கைது செய்யப்பட்ட 1,800 ஆசிரியர்களில் 1,000 பேர் ஆசிரியைகள் இதில் பலர் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மத்திய குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் செந்தில் குமார், விமான நிலைய உதவி கமி‌ஷனர் விஜய குமார், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் கைதான ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். ஆனால் அதை சாப்பிட ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் சோர்வுடன் காணப்படுகின்றனர்.

    இதுபற்றி போராட்டக் குழுவினர் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட பிறகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    சேப்பாக்கத்தில் அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். #teachers #teachersarrest

    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் இன்று நடந்தது.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னை சேப்பாக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் தலைமையில் நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசு வெளியிட்ட 1988-ம் ஆண்டு அரசாணை மற்றும் 2009-ம் ஆண்டு அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

     


    இதுகுறித்து பொதுச் செயலாளர் மயில் கூறியதாவது:-

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம், 1988-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தி இணையாக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்து விட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500 இழப்பு ஏற்பட்டது.

    இந்த இழப்பை சரி செய்ய வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த நிலையில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்தி வெளியிட்ட அரசாணை, 303 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க சிபாரிசு செய்யவில்லை.

    இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.14,800 இழப்பு ஏற்பட்டது. ஒரே கல்வி, ஒரே பணியினை செய்து வரும் ஆசிரியர்களுக்கு 3 விதமான ஊதியம் வழங்கப்படும் நிலை உள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊதிய இழப்பை சரி செய்ய வேண்டும் என இதுவரையில் 54 போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால் சரி செய்யப்பட வில்லை. இதனால் அரசாணை எரிப்பு போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஊதிய முரண்பாட்டை சரி செய்யும்வரை சிறை நிரப்ப தயாராக உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #teachers #teachersarrest

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    லாலாப்பேட்டை:

    கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சேமிப்பு விடுப்பு ஒப்படைப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 1 ஆண்டாகியும் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படவில்லை.

    ஜூன் 2018ல் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவில்லை. எனவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கிருஷ்ணராயபுரம் வட்டார கிளையின் அமைப்பு குழு தலைவர் சக்திவேல், செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்கள் பகுதி -2 வட்டார கல்வி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கோரிக்கைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் காலதாமதமாக நடப்பதாக கூறி அதிகாரிகளை இரவு வரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காஞ்சீபுரம்:

    ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதே போல் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை வழக்கம் போல் கவுன்சிலிங் தொடங்கியது.

    இதில் மாவட்டத்தில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியைகள் பங்கேற்றனர்.

    கவுன்சிலிங் தொடங்கி நீண்ட நேரம் வரை பலருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. மேலும் இரவு வரை இந்த கவுன்சிலிங் நீடித்தது. இதனால் இடமாறுதல் கேட்டு வந்த ஆசிரியர்கள் ஆவேசமடைந்தனர்.

    அவர்கள் கவுன்சிலிங் தாமதமாக நடப்பதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இரவு 10 மணி வரை ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி மற்றும் கல்வி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தாமதமான ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு வரை முதன்மை கல்வி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    இப்போது ஆன்லைன் மூலமே கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதனால் சர்வரில் ஏற்படும் பிரச்சினையால் காலதாமதம் ஆகிறது. ஒரு ஆசிரியருக்கு சுமார் ½ மணி நேரம் கவுன்சிலிங் நடத்தும் நிலை உள்ளது. இதனால்தான் கால தாமதம் உள்ளது. துறை வாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் இன்று காலை கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏராளமான ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதில் நேற்று விடுபட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலிங் நடந்து வருகிறது.
    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #TeacherStruggle #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அடுத்தக்கட்டமாக நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

    அரசு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினால், அவர்களை அழைத்து பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்றுவதும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளாக இருந்தால் அவை குறித்து அரசு ஊழியர் சங்கத்தினரிடம் விளக்கி சமரசம் செய்வது தான் வழக்கமாகும்.

    ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு பதிலாக அவர்கள் மீது அடக்கு முறையை கட்ட விழ்த்து விடும் அணுகு முறையை கடைபிடித்து வருகிறது.

     


    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து பரிந்துரைப் பதற்கான குழுவை கலைப்பதுடன், அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாய மானவையாகும்.

    ஆனால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. மாறாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார்.

    எனினும், ஐந்தாண்டு ஆட்சியில் அத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 6 மாதங்களில் அக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 30 மாதங்களாகியும் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

    அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேசியிருக்க வேண்டும். ஆனால், சர்வாதிகார மனப்போக்குடன் தமிழக அரசு நடந்து கொள்வதால் தான் அதைக் கண்டித்து, நாளை மறுநாள் முதல் சென்னையில் சங்க நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாநிலையும், மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அரசு ஊழியர்களின் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TeacherStruggle #AnbumaniRamadoss

    ×