அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்பலர் வாழ்த்துரை வழங்கினர்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி குடும்பத்துடன் போராட்டம் இன்று நடந்தது.

போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர், திருப்பதி, மாவட்ட தலைவர் சரவணன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் செயலாளர் பிரேம் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், செயலாளர் ரமேஷ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிராம சுகாதார செவிலியர் மற்றும் மேற்பார்வையாளர் சங்க தனலட்சுமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com