search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமன்"

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.
    • சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மதுரை:

    குடும்ப வறுமை காரணமாகவும், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும் பட்டதாரிகள் முதல் படித்தவர்கள் வரை பலரும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதை கனவாக கொண்டுள்ளனர்.

    அவர்களின் பசிக்கு இரைபோடும் வகையில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனங்கள் பல்வேறு ஆசைகளை அவர்களுக்கு விதைத்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கிறார்கள்.

    அவ்வாறு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பலர் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் ஏராளமாக அரங்கேறியுள்ளன. உற்றார், உறவினர்களிடம் கடன் வாங்கி, இருக்கும் நகைகளை அடமானம் வைத்து கிடைத்த பணத்துடன் ஆசைகளுடன் வெளிநாடுகளுக்கு பறக்கும் பலருக்கும் அது நிராசையாகவே இருந்துள்ளது.

    இதில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜெண்டுகள் இதற்காக பணிபுரிந்து வருகிறார்கள். வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு பணி பெண்கள் தேவை மாதம் கை நிறைய சம்பளம் என்கின்ற விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.

    ஆனால், இது பெரிய வேலை. என்பதனால் பலரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சுற்றுலா பயணிகளாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    அவ்வாறு செல்லும்போது, எதாவது பிரச்சினை ஏற்பட்டால், அரசு உதவி செய்வது ரொம்பவே கடினம். இதற்குத் தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு வீட்டு வேலை என்று நம்பி வெளிநாட்டிற்குச் சென்ற தென் மாவட்டங்களைச் சார்ந்த இளம்பெண்கள் அங்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அதாவது வேலை என அழைத்துச் சென்று ஒரு கும்பல் பெண்களை பாலியல் தொழில் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஏலம் மூலம் முகம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்து விடுவதாகப் புகார் பெறப்பட்டுள்ளது.

    அந்த வகையில், ஓமன் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் சென்று பெண்களை ஏலத்துக்கு விடுவதாகவும், அதில் மாட்டிக்கொண்ட தன் தாயை மீட்டு தர வேண்டுமென மகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து ஓமன் நாட்டிலுள்ள ஏஜெண்டு ருக்மணியை ரூ.2, 3 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ருக்மணி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை தனி அறையில், அதுவும் ஆண்கள் தங்கிருந்த அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினரை தொடர்பு கொள்ள முடியாததால் இதுகுறித்து ருக்மணியின் இரண்டாவது மகள் செல்வலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் நேரடியாக மனுவை கொடுத்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், நானும் என் அக்காவும் கல்லூரியில் படித்து வருகிறோம். கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருவதால் தன் தாயை வெளிநாட்டில் இருந்து அழைத்து வர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றார்.

    இதையடுத்து ஓமன் நாட்டில் தவித்து வந்த அந்த பெண் பல்வேறு சமூக அமைப்புகள் உதவியுடன் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டார். இதேபோல் ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

    ×