search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special train"

    • தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
    • மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் பிப்ரவரி 4-ந்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

    திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே ஓடும் சிறப்பு ரெயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    • தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
    • ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னைக்கு புறப்படுவார்கள். இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 29-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (30-ந்தேதி) 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

    அதே போல் கோவையில் இருந்து நாளை 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 29-ந்தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.

    • கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.
    • பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவை மார்க்கங்களில் இயக்கப்படுகின்ற ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    சிறப்பு ரெயில்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் இடங்கள் நிரம்பிவிட்டன.

    இந்த நிலையில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இன்று அறிவிக்கப்பட்டன. 16, 17-ந்தேதிகளில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    தாம்பரத்தில் இருந்து 17, 18-ந்தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது.

    இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக தாம்பரம் வந்து சேருகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

    பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரெயில் நாளை (12-ந்தேதி) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பெங்களூருவில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து 12-ந்தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு பகல் 12 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி கோட்டை வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

    • கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளாா்.

    கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும்.

    தொடா்ந்து திங்கள் கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் வழக்கமான சேவை இயக்கப்படும். இதில் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06421) போத்தனூருக்கு காலை 5.35 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு காலை 5.54 மணிக்கும், பொள்ளாச்சிக்கு காலை 6.25 மணிக்கும் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06422) கிணத்துக்கடவுக்கு இரவு 9.18 மணிக்கும், போத்தனூருக்கு இரவு 9.44 மணிக்கும் கோவைக்கு இரவு 10.15 மணிக்கும் வந்தடையும்.

    இதுபோல் ஏற்கனவே கோவை-பொள்ளாச்சி இடையே வாரத்தின் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர) இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06419/06420) திங்கள்கிழமை முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
    • திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவிக்கும் 500 பயணிகளை மீட்க அரசும், ரெயில்வே துறையும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயிலில் உள்ள பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்களை அழைத்து வர 13 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் ரெயில் நிலையம் அருகில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு 38 கி.மீ. தூரமாகும். அங்கு வந்து சேரும் பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில் முழுக்க முழுக்க வெள்ளத்தால் வழியில் சிக்கிக் கொண்ட பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயிலில் உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவை உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை வந்து சேரும் வரையில் உணவு அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய வது:-

    திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும். எத்தனை பெட்டிகள், எப்போது ரெயில் புறப்படும் என்பது போன்ற தகவல்கள் பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டு வந்த பிறகு தான் தெரிய வரும் என்றார்.

    • வாரணாசியில், கலாசார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பு வருகின்ற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • தெற்கு ரெயில்வே சென்னை சென்டிரல், கன்னியாகுமாரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    சென்னை:

    புனித நகரமான வாரணாசியில், கலாசார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பு வருகின்ற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.

    இதனால் மக்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சென்னை சென்டிரல், கன்னியாகுமாரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 15, 23, 27-ந்தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண்.06101), (06109), (06113) அடுத்த 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 20, 28-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06102), (06110), (06114) அடுத்த 3-வது நாள் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

    இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 16, 20-ந் தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06103), (06107) அடுத்த 4-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 22, 26-ந் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06104), (06108) அடுத்த 4-வது நாள் காலை 11.50 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும்.

    இதேபோல, கோவையில் இருந்து டிசம்பர் 19, 25-ந்தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06105), (06111) அடுத்த 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 24, 30-ந்தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06106), (06112) அடுத்த 4-வது நாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் அதேநாள் இரவு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகளில் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037) அதேநாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.

    இதேபோல, மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06038) அதேநாள் இரவு 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.
    • வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக வேலூருக்கு சிறப்பு ரெயில் (06117) இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் திருச்சியில் இருந்து நாளை காலை 4.50 மணிக்கு புறப்பட்டு பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வழியாக காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலைக்கும், மதியம் 1 மணிக்கு வேலூ ருக்கும் சென்றடைகிறது.

    அதே ரெயில் மறுமார்க்கத்தில், நாளை வேலூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.17 மணிக்கு கும்பகோணம் வந்தடையும், தொடர்ந்து தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயில், திருவெறும்பூர், மயிலாடுதுறை, வைத்தீ ஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருக்கோவிலூர், போளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை சென்டிரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.

    சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை சென்டிரலில் இருந்து இன்று (20-ந்தேதி) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, யஸ்வந்த்பூரில் இருந்து நாளை (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது.

    மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    ×