search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி- திருவண்ணாமலைக்கு தஞ்சை வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    திருச்சி- திருவண்ணாமலைக்கு தஞ்சை வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

    • தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.
    • வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக வேலூருக்கு சிறப்பு ரெயில் (06117) இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் திருச்சியில் இருந்து நாளை காலை 4.50 மணிக்கு புறப்பட்டு பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வழியாக காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலைக்கும், மதியம் 1 மணிக்கு வேலூ ருக்கும் சென்றடைகிறது.

    அதே ரெயில் மறுமார்க்கத்தில், நாளை வேலூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.17 மணிக்கு கும்பகோணம் வந்தடையும், தொடர்ந்து தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயில், திருவெறும்பூர், மயிலாடுதுறை, வைத்தீ ஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருக்கோவிலூர், போளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×