search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snake bite"

    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.
    • சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த அவல்பூந்துறை வடக்கு வெள்ளியம்பாளையம் புது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    சம்பவத்தன்று கொலாங்காட்டுவலசு பருத்திக்காரர் தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.

    இதனால் வலியால் அலறி துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.

    அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பாம்பு பிடிக்க சென்றபோது விபரீதம்
    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை அடுத்த கருப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோழனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாகப் பாம்பு இருப்பதாக திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன், சிறப்பு நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள் சென்று பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தீயணைப்பு வீரர் சரவணன் (வயது 26) என்பவரை பாம்பு கடித்து விட்டது. சரவணன் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.

    அவரை சகதீயணைப்பு வீரர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சத்தியம்மா சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
    • மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, பாலவிடுதி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி போதும்பொன்னு. இவர்களுக்கு, சத்தியம்மா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர் சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளியில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் சக்தியம்மா பள்ளிக்கு சென்றார்.

    பின் மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது. இதனால் வலி தாங்கமுடியாமல், சத்தியம்மா வகுப்பறைக்கு ஓடி வந்தார்.

    இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மோகன்ராஜ், மாணவியின் பெற்றோ ருக்கு தகவலளித்தார். பின் சந்தியம்மாவை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவி சந்தியம்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.
    • இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கண்ணகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேமலை (82). இவரது மனைவி பழனியம்மாள். சேமலை மகனுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சேமலை யும், அவரது மகனும் வீட்டின் காம்பவுண்டுக்குள் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் சிமெண்ட் சீட் செட்டிற்குள் இருந்த பழைய பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.

    இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேமலை அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேமலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம், பர்கானா மாவட்டம் உதர்பகுண்டி பகுதியை சேர்ந்தவர் முகுல்காசி. இவர் தனது மனைவி பஜீலா காத்தூன், மகன் பர்கன்காசி (வயது 2) ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    முகுல்காசி பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை பார்கையில் முதுகில் பாம்பு கடித்த காயம் இருந்துள்ளது. உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பர்கன்காசி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.
    • சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர், கணேசன். இவரது மனைவி பானுமதி ( 47) .இவர் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் புதூரில் ஒரு வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.

    அருகில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து நாமக்கலில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் ( 27) மோகனூர் போலிசில் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மற்றும் சிறப்பு சப்-இ ன்ஸ்பெக்டர், தமிழ ழகன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

    • பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்த போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (60).

    சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்ததால் வீட்டின் வெளியே கிடந்த பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்து வைத்தார்.

    அப்போது அதன் இடையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கண்ணம்மாள் மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு கடித்தது.
    • அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது.

    சூரம்பட்டி:

    ஈரோடு அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்நிலையில் இன்று காலை திவ்ய பாரதி வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு அவரை கடித்தது.

    தன்னை பாம்பு கடித்தது என்று திவ்ய பாரதிக்கு தெரிய வில்லை. பூரான் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்து அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்.

    இதைதொடர்ந்து அவர்கள் திவ்ய பாரதியை அருகே உள்ள ஒருவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர் திவ்ய பாரதி இறந்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்ய பாரதியின் கணவர் ரகுநாதன் மற்றும் மாமியார் அங்கேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமணமாகி 4 வருடமே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ விசார ணை நடந்து வருகிறது. இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து திவ்ய பாரதியை பாம்பு தான் கடித்த என்ற தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு பதுங்கி இருந்த பாம்பை அவர் லாவகமாக பிடித்தார்.

    அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த திவ்ய பாரதியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இளம் பெண்ணை கடித்த நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.
    • இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் கார்த்தி (38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    கார்த்தி அவரது தந்தை சண்முகத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்தி கடந்த 8-ந் தேதி ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே பாம்பு கடித்ததில் முதியவர் பலியானார்.
    • அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சாதிபதி (வயது58). இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த போது பாம்பு கடித்தது. உடனே அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லட்சாதிபதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்ற விவசாயியை பாம்பு கடித்தது.
    • இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). விவசாயி. சண்முகசுந்தரம் சம்பவத்தன்று சிறுவன்காட்டுவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டி கிணத்து மேட்டிற்கு மோட்டார் போட சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

    இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லாவரம் அருகே பாம்பு கடித்து மாணவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகையா, இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் என்கிற செந்தில் குமார் (17), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு தனது தந்தையுடன் திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது ரோட்டோரம் சென்று கொண்டிருந்த பாம்பு சதீஷ் குமாரை கடித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ×