search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker killed by"

    • நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார்.
    • இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள மைலம்பாடி புது காலனி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நாராயணசாமி தனது வீட்டின் அருகில் மறைவான இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

    உடனே நாராயணசாமி தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூச்சலிட்டார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாராயணசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக மனைவி வளர்மதி பவானி போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • அதில் மின்கசிவு இருந்துள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் மரவபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (43). கட்டுமான தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நள்ளிரவில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்நிழல் கூறை அமைப்பதற்காக இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த துணை பிடித்துள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. இதனால் மோகனசுந்தரம் தூக்கி வீசப்பட்டார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இது குறித்து வெள்ளித்திருப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.
    • சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த அவல்பூந்துறை வடக்கு வெள்ளியம்பாளையம் புது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    சம்பவத்தன்று கொலாங்காட்டுவலசு பருத்திக்காரர் தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.

    இதனால் வலியால் அலறி துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.

    அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×