search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pallavaram"

    பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை எடுத்து மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.

    இதனால் காலி குடங்களுடன் மக்கள் தண்ணீர் லாரிக்காக வீதிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதே போல் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட திரிசூலம் அருகே உள்ள ஈஸ்வரி நகர் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வீட்டு பைப்புகளில் தண்ணீர் வராததாலும், டேங்கர் லாரிகளில் நீர் சப்ளை இல்லாததாலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈஸ்வரி நகர் பகுதி மக்களின் ஒரே நம்பிக்கையாக அப்பகுதியில் உள்ள கிணறு உள்ளது. அதில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    நெரிசலை தடுப்பதற்காக பொதுமக்களே வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல் மூலம் தண்ணீர் எடுப்பவர்களின் வரிசை தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்கள் மட்டும் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும். ஒரு குடும்பத்துக்கு 4 குடம் தண்ணீர் எடுக்கலாம்.

    இதற்காக கிணற்றை சுற்றி கம்பிகள் அமைத்து உள்ளனர். அதில் 13 கப்பிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

    தேர்ந்து எடுக்கப்படும் குடும்பத்தினரில் 60 பேர் காலை 6 மணிக்கும், 80 பேர் மதியம் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்த கிணறு 30 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பயன்பாட்டுக்காக தோண்டப்பட்டது.

    நாங்கள் இந்த கிணற்றை தூர்வாரி பயன்படுத்தி வருகிறோம். தற்போது கிணற்றில் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடி வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    பல்லாவரம் அருகே பாம்பு கடித்து மாணவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகையா, இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் என்கிற செந்தில் குமார் (17), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு தனது தந்தையுடன் திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது ரோட்டோரம் சென்று கொண்டிருந்த பாம்பு சதீஷ் குமாரை கடித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறில் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி ஆதாம் நகரைச்சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாகல்கேனி- திருநீர்மலை சாலையில் பன்றி இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு சீனிவாசன் மது போதையில் இரும்பு கம்பியால் சாலையில் சென்றவர்களை விரட்டியடித்தபடி தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விஜய், அவரது நண்பர் பார்த்திபன் ஆகியோரை சீனிவாசன் கம்பியால் தாக்கினார்.

    இதனால் அவரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது விஜய், பார்த்திபன் தங்களது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் சீனிவாசனை கையில் வைத்து இருந்த இரும்பு கம்பியை பிடுங்கி சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சீனிவாசன் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் பார்த்திபன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

    பல்லாவரம் அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    வண்டலூரில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் ரேடியல் சாலையை இணைக்கும் மேம்பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடிரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் பஸ்சின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த பூமா(66) என்ற பெண் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர்.

    பல்லாவரம் அருகே கழிவு நீர் தொட்டி இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி கண்ணபிரான் தெருவில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாரி (வயது22), முகமது அவரித் (23), அஜய் (23) ஆகிய தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்த கழிவறையில் அடைப்பு ஏற்பட்டது. அன்சாரி, முகமது அவரித், அஜய் ஆகிய 3 பேரும் நேற்று இரவு 8 மணிக்கு அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டி சுவர்இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.

    இதில் அன்சாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். முகமது அவரித், அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே முகமது அபரித் பலியானார்.

    அஜய் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லாவரம் அருகே என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்த போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், வினாயகா நகர், 4-வது தெருவில் வசித்து வருபவர் அலெக்ஸ். என்ஜினீயர். மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 5 வயது மகள் மதிவானிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அலெக்சும், அவரது மனைவியும் ஆஸ்பத்திரியில் இருந்து மகளை கவனித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு உடல் நலம் தேறிய மகளை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பீரோவில் இருந்த 70 பவுன் நகை, வெள்ளிப் பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நகை-பொருட்களை சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்லாவரம் அருகே மகளிர் கடன் தருவதாக கூறி பல பெண்களிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த அனகாபுத்தூர் தேவராஜ் நகரில் அரசு மானியத்துடன் வட்டி இல்லா மகளிர் கடன் ஒவ்வொருவருக்கும் தரப்படும் என்று குன்றத்துரைச் சேர்ந்த ரகுராமன், ராஜ்குமார் (41) ஆகியோர் நிறுவனம் ஒன்றை தொடங்கினர்.

    பம்மல், பொழிச்சலூர், நாகற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் கடன் குறித்த தகவல் பரவியது. இதில் உறுப்பினராக ரூ.200 செலுத்த வேண்டும் என்று மூன்று மாதத்தில் ரூ.1 லட்சம் கடன் தரப்படும் என்றும் அவர்கள் கூறியதால் ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பித்த சிலருக்கு ரூ.1 லட்சம் கடனும் கொடுத்ததால் ஏராளமான பெண்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். ஒருவரே தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரிலும் ரூ.200 வீதம் செலுத்தினர்.

    அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட 2 வாலிபர்களும் அலுவலகத்தை மூடி விட்டு ஒட்டம் பிடித்தனர்.

    ஒரு மாதமாக அந்த அலுவலகம் மூடிக்கிடக்கிறது. அதன்பிறகுதான் மோசடி கும்பல் என தெரியவந்தது. சுமார் ஒரு கோடி வரையில் பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ரகுமானும், ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை பொதுமக்களே பிடித்து நேற்று தர்மஅடி கொடுத்தனர். பின்னர் சங்கர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள ரகுமானை தேடி வருகின்றனர். மேலும் கடன் தருவதாக ஏமாந்த பெண்களிடம் புகார் மனுக்களையும் பெற்று வருகின்றனர்.  #Tamilnews
    ×