search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister C.V.Ganesan"

    • பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.

    நெல்லிக்குப்பம்:

    கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

    இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.

    இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.

    மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.

    பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.
    • அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சென்னை, பல்லாவரம் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த மருத்துவமனையில் சுமார் 68,000 காப்பாளர்கள் உள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த வெளிநோயாளிகளிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மருந்தகத்தில் போதுமான அளவில் மருத்துகள் கையிருப்பில் உள்ளது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
    • 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,933 தொழிலாளா்களுக்கு ரூ.63.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.

    இந்தக் கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது வரையில் 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1.12 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தப்பட்டு முகாமில் அதிக அளவாக 75 ஆயிரம் இளைஞா்கள் பங்கேற்றனா். இதில், 7,852 பேருக்கு அன்றைய தினமே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஒசூரில் நடைபெற்ற முகாமில் 25 ஆயிரம் போ் பங்கேற்ற நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. உதகையில் நடைபெற்ற முகாமில் குறைந்த அளவாக 5 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்ற நிலையில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. திருப்பூரில் வரும் 2023 ம் ஆண்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா். இதுதொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

    இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இயக்குநா் கோ.வீரராகவ ராவ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் வாரியத் தலைவா் பொன்குமாா், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    ×