search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellikuppam"

    • விவசாயிகளுக்கு கடன் வழங்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து 26 -ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளது.
    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டில் அருள் ஜோதி ராமலிங்கம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் சம்பத் வரவேற்றார். மாநாட்டில் விவசாய சங்க மாநில துணை செயலாளர் மாதவன் தொடங்கி வைத்து பேசினார். ஆலை மாவட்ட செயலாளர் தென்னரசு அறிக்கை வாசித்தார். மாவட்ட இணை செய லாளர் சரவணன் தீர்மானங்கள் வாசித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், கரும்பு சங்க மாநில செயலாளர் இரவிச் சந்திரன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெ.ராம–லிங்கம், மாவட்ட பொரு–ளாளர் தட்சணாமூர்த்தி வாழ்த்துரை ஆற்றினார்கள். முடிவில் ராமானுஜம் நன்றி கூறினார். கூட்டத்தில் மத்திய அரசு கரும்பு டன்னுக்கு 4500 ரூபாய் விலை வழங்கிட வேண்டும். மாநில அரசு அறிவித்த எஸ்.ஏ.பி நிலுவைத் தொகை–யை உடனே வழங்கிட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலையில் எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் டன் 1-க்கு 100 ரூபாய் பிடித்தம் செய்த தொகையை உடனே விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

    கரும்பில் கழிவு பிடித்தம் செய்த ரூபாயை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம், அரசு, விவசாயி–கள் பங்கேற்கும் பழையபடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அலை கழிப்பதை கண்டித்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு வருகிற 26-ஆம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயி–கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நெல்லிக்குப்பத்தில் டிரைவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. தற்போது சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, மருதாடு உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள்,

    டிராக்டர்கள், மாட்டு வண்டி மூலமாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வருவார்கள். பின்னர் தனியார் ஆலையின் யார்டில் 1 முதல் 3 நாட்கள் தங்கி இருந்து கரும்புகளை இறக்கி வைத்து விட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் வாகனங்களில் வரக்கூடிய டிரைவர்கள் யார்டில் இரவு நேரங்களில் தூங்குவார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதத்துடன் யார்டில் புகுந்தனர். பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த டிரைவர்களை 20-க்கும் மேற்பட்டவர்களை சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். அப்போது டிரைவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள்.

    இருந்த போதிலும் அந்த கும்பல் அவர்களை தொடர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர் காயமடைந்த டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு இருந்த 200க்கும் மேற்பட்ட டிரைவர்களும் தனியார் ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டிரைவர்கள் கூறுகையில், ஒரு கும்பல் எந்தவித காரணமுமின்றி பயங்கர ஆயுதங்களுடன் எங்களை தாக்கினார். அப்போது அந்த கும்பலை நாங்கள் பிடிக்க சென்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ஒரு டிரைவர் பலத்த காயமடைந்து உள்ளார். ஆகையால் தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள்.

    இதனை தொடர்ந்து நெல்லிக் குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களுடன் ஆலை நிர்வாகம் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த நபர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×