என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் ஆய்வு"
- குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம்.
- கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பெஞ்ஜல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் குப்பை கிடங்கில் இருந்து குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி கோபாலன்கடை பகுதியில் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய் ஜெ சரவணன்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் கோபாலன் கடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் அந்த வழியாக சென்ற குப்பை வண்டியில் ஏறி குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து கழிவுகள் வெளியேறி வாய்க்கால் வழியாக ஊருக்குள் புகுந்தது தெரியவந்தது.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மீண்டும் குப்பை வண்டியில் ஏறி புறப்பட்டு சென்றார். அமைச்சர் குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.
நெல்லிக்குப்பம்:
கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.
அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.
இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.
பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- திதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
- மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சியி்ல் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். அப்போது மாணவர் வருகை, வழங்கும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைஞர் மோகன், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.
- நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.
வண்டலூர்:
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணம் மெற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்தார்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை குறித்து கேட்டறிந்து, உணவின் தரத்தை பரிசோதித்தார். அப்போது கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.
- சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
- மாணவர்கள் நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், கழிவறை வசதி, சமையற்கூடம், மாணவிகளின் வருகை பதிவேடு போன்றவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவி களிடம் குறைகளை கேட்ட றிந்து கலந்துரையாடினார்.
அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-
முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.254.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட தென்னம்பாளையம் மீன் சந்தை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் ரூ.17.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் ரூ.27.05 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பணி ,திருப்பூர் மாநகராட்சி 3-ம் மண்டலம் மற்றும் 4-ம் மண்டலப்பகுதிகளில் ரூ.207.15 கோடி மதிப்பீட்டில் 17எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் மற்றும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.
இதில் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செல்லாண்டியம்மன் துறை ராஜீவ் நகர்பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அமர்ஜோதி கார்டன் காளியப்பா நகர் பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 20,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டு வரும் கால்நடை பன்முக மருத்துவமனை பணியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகராட்சியை பொறுத்த வரையில் குடிநீர்த்திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிந்த பிறகு மாநகர பகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடின்றி பொது மக்களுக்கு வழங்குகின்ற சூழ்நிலை ஏற்படும். இனி வரும் காலங்களில் குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அடிப்படை தேவைகள் குறித்து தனி கவனம் செலுத்தவும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிர மணியன், தலைமைப்பொறியாளர் (பொறுப்பு) செல்வவிநாயகம், உதவி ஆணையர் வினோத், செயற்பொறியாளர்கள் வாசுகுமார், கண்ணன், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்துள்ளது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளி மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலை சேராப்பட்டு அருகே உள்ள கி ளாக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சேராப்பட்டு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, இன்னாடு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்து ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து செல்கிறார்களா? மாணவ மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அதற்கான பதில்களையும் கேட்டு கொண்டார். அப்போது கல்வராயன் மலை ஒன்றிய குழு தலைவர் சந்திரன் உடன் இருந்தார்.
- ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே உள்ள வாணாபுரத்தில் இயங்கிவரும் கஸ்தூரிபாய் காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வரும் மாணவிகளின் வசதிக்காக அங்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று (புதன்கிழமை) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி புதிதாக கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்அதே பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி யிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்கி ருந்த 1ம் வகுப்பு மாணவர்களிடம் பாடப்புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்களின் கல்விதிறனை ஆய்வு செய்தார், மேலும் அருகில் இயங்கி வரும் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களிடமும் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் பெருமாள். துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றியக்குழு துணை தலைவர் அண்ணா துரை மற்றும் கட்சி நிர்வாகி கள் பலர் உடன் இருந்தனர்.
- அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
- மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
வேலூர்:
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 10. 81 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட உள்விளையாட்டு அரங்கம் மற்றும் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டறிந்தார்.
மேலும் இது தொடர்பான விவரங்களை விரிவான அறிக்கையுடன் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புமாறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெருஷா ஜாஸ்மின் என்ற மாணவியை பாராட்டி சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
- பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார்.
தருமபுரி,
நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டர் இல்லம் அருகேவுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளர் அலுவலகம் முன்பிருந்து நடைப்பயிற்சியினை தொடங்கிய அமைச்சர் செல்பி பாலம் புதிதாக அமைக்கப்பட்ட சிப்காட் சாலை, தடங்கம் மேம்பாலம் வழியாக நடைப்பயிற்சி யினை மேற்கொண்டு மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தனது நடைபயிற்சியினை நிறைவு செய்தார்.
பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார். இந்த நடைபயிற்சியின் போது மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தடங்கம் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
- சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களுக்காக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாராப்பூர் உள்வட்டம் மேலவண்ணாரியிருப்பு பகுதியில் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொலைத்தொடர்பினை மேம்படுத்திடும் பொருட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம், 4 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 38 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதிகளில் நடந்து வரும் பணிகளை தரமான முறையில் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் என்னிடமோ, கலெக்டரிடமோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலமாகவோ கொடுக்கலாம். அந்த மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
- கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பேரூ ராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு, தற்பொழுது ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை குறைந்த ஆட்களை வைத்து பணி நடைபெறுவதால் உடனடியாக கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா,பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், இளநிலை பொறியாளர் பழனி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.