என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டேன் டீ தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் பணியை அமைச்சர் ஆய்வு
- டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.
- ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஓய்வுபெறும் டேன் டீ தொழிலாளா்களுக்கு நடுவட்டம் பேரூராட்சியில் வீடு கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.அதனால், ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினா் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததன் பேரில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், டேன் டீ மேலாண்மை இயக்குநா் (பொ) வெங்கடேஷ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்த் ராவ், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநரும் இண்கோ சா்வ் முதன்மைச் செயல் அலுவலா் மோனிகா ராணா, வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, டேன் டீ பொது மேலாளா் அக்பா், வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்