search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministerial Review"

    • முதல்-அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.
    • அடுத்த மாதம் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 2 நாட்கள் ராமநாத புரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மீன வர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் மண்டபம் கேம்ப் பகுதியில் கலோரியால் பங்களா அருகில் உள்ள இடத்தில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    மேலும் ராமநாதபுரத்தில் கட்சி நிகழ்ச்சி நடத்துவதற்காக அச்சுந்தன்வயல், பேராவூர் இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
    • மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 10. 81 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட உள்விளையாட்டு அரங்கம் மற்றும் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டறிந்தார்.

    மேலும் இது தொடர்பான விவரங்களை விரிவான அறிக்கையுடன் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புமாறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெருஷா ஜாஸ்மின் என்ற மாணவியை பாராட்டி சான்றிதழை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.
    • சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.67 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 8 மாடிக்கொண்ட கட்டிடத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ வேலு, சு.முத்துசாமி ஆகியோர் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.

    அங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கட்டிடம் தரமாக கட்டப்பட்டுள்ளதா? என்ற ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு தலைநகரில் அமைந்துள்ள மருத்துவ மனையில் கூடுதலாக 350 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ. 67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 11.3.2021 ஆம் ஆண்டு கட்டிட பணி தொடங்கியது.

    கட்டுமான பணிகள் தரமாக உள்ளதா என்பது குறித்து செய்தோம். தரமான பொருட்களை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் மட்டும் உள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.

    சாலை பணியாளர்கள் நியமனம் செய்யும்போதே சாலை பணிகளுக்கு தான் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு என்பது அரசாங்க விதிகளிலே இல்லை.

    கோபியில் சங்கம் என்ற பெயரில் சாலை பணியாளர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறையில் அதிக விபத்து ஏற்படுவதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையின்படி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    அடுத்த முறை டெல்லிக்கு செல்லும் போது பாலம் வருவதற்கு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும்.நெடுஞ்சாலை துறையில் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கடைநிலை ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் மேற்பார்வை யாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட வில்லை என்ற கேள்விக்கு, நெடுஞ்சாலை துறையில் 2003க்கு பின்னால் இருப்பவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க கூடாது எனவும் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இதனை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது . ஆய்வின் முடிவில் முதல்வர் ஆணையின் படி பதவி உயர்வு வழங்கப்படும்.விதிக்கு உட்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
    • திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னா் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளா்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாட்டுச்சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டது.

    தற்போது காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவா் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச் சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் ஓராண்டு வாடகையாக ரூ. 3 லட்சம் செலுத்தி வாரம்தோறும் மாட்டுச்சந்தை செயல்பட உள்ளது.

    வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • மதுரை ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை.

    மதுரை

    மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் இருந்து வழக்கமாக பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். கடந்த 10 நாட்களாக, காலை 8 மணிக்கு செல்வதாக தெரிகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆவின் பால் கிடைக்கவில்லை. முகவர்கள் கால தாமதமாக வந்த ஆவின் பால் வாகனங்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாவட்டத்தில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால் 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால்களை அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் நிரந்தர ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள பால் தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குளறுபடிகள் மாநில அளவில் பிரதிபலித்தது.

    இந்த நிலையில் அமைச்சர் நாசர் இன்று மதுரை வந்தார். அண்ணாநகர் ஆவின் நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அமைச்சருடன் கலெக்டர் அனீஷ்சேகர், மேலாண் இயக்குநர் சுப்பையன் ஆகியோரும் உடனிருந்தனர்.

    • வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • 1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் நேரடி நிர்வாகம் மூலம் வாலி நோக்கத்தில் 1974-ம் ஆண்டு தமிழ்நாடு உப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. வணிக ரீதியாக 1978-ம் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சுமார் 5,236 ஏக்கர் நிலப்பரப்பளவில் செயல்படுகின்றன.

    1,500-க்கும் மேற்பட்ட பருவகால தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் உத்தரவுக்கிணங்க சட்ட மன்றத்தில் அறிவித்த படி அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திக ரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு ஆகியவற்றை நெய்தல் உப்பு என்ற வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் உற்பத்தி செய்திட ஏதுவாக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

    இதுவரை 25 டன் நெய்தல் உப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது மேலும் அயோடின் செரியூட்டப்பட்ட உப்பு மற்றும் இருவித செரியூட்டப்பட்ட உப்பினை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் வேலை வாய்ப்பு அதிகரிக்க தேவையான உட் கட்ட மைப்புகளை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதியில் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின்போது உப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜாமணி, மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தமிழ்நாடு அரசு நிறுவன தனி அலுவலர் தில்லி குமார், திட்ட மேலாளர் விஜயன், துணை மேலாளர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்து செல்வன், மேலக்கிடாரம் ஒன்றிய கவுன்சிலர் பார்வதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், ஆப்பனூர் ஆறுமுகவேல், குலாம் முகைதீன் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கண்ணன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்லும் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

    அங்குள்ள மதுரை கோட்ட முன்பதிவு விசா ரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.குறிப்பாக, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் பஸ் வசதிகள்குறித்துஆய்வு செய்தார். பயணிகளிடம் பஸ் வசதிகள் குறித்து கருத்து களையும் கேட்டறிந்தார்.

    அமைச்சரின் இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

    • அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம்

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம் வந்த அமைச்சரை தி.மு.க. சார்பில் நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வரவேற்றார். இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடி கடல் பகுதியில் சிறப்பு பூஜை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் அமைத்துள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடி, பின்னர் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

    கோவிலுக்கு வந்த அமைச்சரை ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாசர்கான் வரவேற்றார். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வித்திறன் மற்றும் பள்ளி கட்டிடம் குறித்து ஆய்வு செய்தார்.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யம்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

    • கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
    • கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    தாராபுரம்

    தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் பகுதிகளில் முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் தனியாருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிரச்சினைக்கு காரணமான நஞ்சுண்டாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது கிராம மக்கள் கோழி பண்ணையில் இருந்து பரவும் ஈக்களால் தொடரும் தங்களது அவல நிலை குறித்தும், அதனால் பரவி வரும் நோய்த்தொற்று குறித்தும் புகார்களை கூறினர். உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

    ×