search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MINISTER REVIEW"

    • எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் 1895-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் சாலையில் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக் காவலர் கோவில்உள்ளது இங்கு புகழ்பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக் கோவிலை காத்து அந்நியர்கள் படையெடுப்பின் பாதுகாத்த ஸ்ரீ நெல்லையப்ப சுவாமி ஸ்ரீ வேமண்ணா சுவாமி உருவங்கள் உள்ளன.

    இந்த கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டது எப்போது என்பது குறித்து எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் 1895-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது .

    இது தவிர வேற எந்த ஆவணமும் இல்லாத இந்த கோயிலுக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப் பட்டது. விரைவில் இந்த புனரமைப்பு பணிகளை செய்து குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நத நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இந்த கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழமை வாய்ந்த இந்த கோவிலை சிறப்பாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு பகுதியினையும் ஆய்வு செய்தார். காலியாக உள்ள இடங்களில் பூங்கா அமைத்தும் பொதுமக்கள் பார்வையிடவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்றால் கூடுதலாக நிதி ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும், அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவிஆணையர் ரமணி காந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார்.
    • உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,

    அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருள்கள் பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, தாட்கோ மேலாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


    • சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையானது.
    • இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது, கைது நடவடிக்கை தொடரும்.

    சின்னச்சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    அந்த பள்ளியில் இன்று தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தீக்கிறையான பள்ளி அறைகள் மற்றும் அலுவல அறைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்னர் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:

    மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஒன்று கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர்.

    தவறான தகவலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது.

    சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது.

    வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது. கைது நடவடிக்கை தொடரும். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருகிற 26-ந்தேதி முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்
    • தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று உள்ள நிலையில் புதிய தவணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்

    திருச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகிற 26-ந்தேதி திருச்சி வருகை தருகிறார். அன்று திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கதவணையை திறந்து வைக்க உள்ளார்.

    ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த பழைய அணை உடைந்து விட்ட காரணத்தால் புதிய அணை கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்று உள்ள நிலையில் புதிய தவணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முக்கொம்பு மேலணையில் இன்று நேரில் பார்வையிட்டு முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், எம். பழனியாண்டி, நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் வேட்டைச்செல்வம், செயற்பொறியாளர்கள் கீதா, மணிமோகன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×