search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் சாவு"

    • மனைவியிடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது.
    • மோனிசா வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் பரபு. இவரது மனைவி மோனிசா (வயது 24). இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    சம்பவத்தன்று கணவன்-மனைவியிடையே குடும்பதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் மனமுடைந்து காணப்பட்ட மோனிசா வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமலா எலிபேஸ்ட் தின்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்துள்ள பொம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி விமலா (வயது28). இந்த நிலையில் விமலா எலிபேஸ்ட் தின்று உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மதுரையில் நேற்று மாலை வெப்ப சலனம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொம்பாடி பகுதியில் மழை பெய்தபோது கண்மாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவிகா அவசர அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இடி தாக்கியதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள சென்னூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நிவேதா (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 அரை வருடம் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 அரை வருடம் ஆன நிலையில் நிவேதா இறந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இருந்தது
    • நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த டி.கோட்டபள்ளி பகுதியைச் சோமசேகர்.

    இவரது மகள் பவ்யாஸ்ரீ (வயது22). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது.
    • சிகிச்சை பலனின்றி ஆனந்தி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தாமரைகோழியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றி செல்வன். இவரது மனைவி ஆனந்தி (வயது31).

    இவர் சம்பவத்தன்று மாட்டிற்கு கூழ் காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த அவரது உடல் முழுவதும் பற்றி கொண்டதால் அவர் வலியால் அலறினார். உடனே அவரது உறவினர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவிரக்தி அடைந்த ஷோபா விஷம் குடித்தார்.
    • அது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே முருக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி ஷோபா (வயது 19). இவர்களுக்கு 8 மாதம் முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணத்தினால் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் யாரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மனவிரக்தி அடைந்த ஷோபா விஷம் குடித்தார். அருகில் இருந்தவர் சேலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஷோபா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இறப்பு குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தருமபுரிநேற்று பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
    • சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள புதுக்கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அம்பிகா (வயது24). இவர் நேற்று பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சை க்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது முதல் அவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • ஆனால் அவர் ஏற்கனவே இந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்

    மேலசொக்கநாதபுரம்:

    குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் பரணி சக்கரவர்த்தி மனைவி தீபாராணி. (வயது 21). இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.

    பிரசவத்துக்காக போடியில் உள்ள தனது உறவினர் சுருளிமுத்து வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது முதல் அவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    நேற்று மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் அவர் ஏற்கனவே இந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது குறித்து அவரது தந்தை ேபாடி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    விருதுநகர்

    ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, உறவினர்கள் கோவர்த்த ணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவ ணராஜ் ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
    • அவரை காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. இவரும், குல்லூர் சந்தையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி (27) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ெதரிகிறது. இதன் காரணமாக அலெக்ஸ்பாண்டி அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டிச்செ ல்வி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைதாகாமல் இருக்க அலெக்ஸ்பாண்டி குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொ டர்ந்து சம்பவத்தன்று அலெக்ஸ்பாண்டி மோட்டார் சைக்கிளில் பாண்டிச்செல்வியை சமரச தீர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். வழியில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டிச்செல்வி நடுரோட்டிலேயே தான் கொண்டு வந்திருந்த ஸ்பிரேயை உடலில் அடித்து க்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி இறந்தார்.

    அலெக்ஸ்பாண்டி சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு கடித்தது.
    • அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது.

    சூரம்பட்டி:

    ஈரோடு அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்நிலையில் இன்று காலை திவ்ய பாரதி வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு அவரை கடித்தது.

    தன்னை பாம்பு கடித்தது என்று திவ்ய பாரதிக்கு தெரிய வில்லை. பூரான் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்து அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்.

    இதைதொடர்ந்து அவர்கள் திவ்ய பாரதியை அருகே உள்ள ஒருவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர் திவ்ய பாரதி இறந்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்ய பாரதியின் கணவர் ரகுநாதன் மற்றும் மாமியார் அங்கேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமணமாகி 4 வருடமே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ விசார ணை நடந்து வருகிறது. இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து திவ்ய பாரதியை பாம்பு தான் கடித்த என்ற தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு பதுங்கி இருந்த பாம்பை அவர் லாவகமாக பிடித்தார்.

    அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த திவ்ய பாரதியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இளம் பெண்ணை கடித்த நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×